tamilnadu

img

பனியன் ஆலைகளில் தொழிலாளர் நல சட்டங்களை அமல்படுத்திடுக

திருப்பூர், ஜூலை 15- பனியன் தொழிற்சாலைகளில் தொழிலாளர் நல சட்டங்களை  முறையாக அமல்படுத்த வலியு றுத்தி சிஐடியு  பனியன் மற்றும்  பொதுதொழிலாளர் சங்கம் சார் பில் திங்களன்று திருப்பூர் தொழிற் சாலை இணை இயக்குனர் அலு வலகம் முன்பு ஆவேசமிகு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.  திருப்பூர் மாவட்டத்தில் இயங்கி வரும் பனியன் தொழிற் சாலைகளில் பெரும்பான்மை யானவை தொழிலாளர் மற்றும் தொழிற்சாலை சட்டங்களை அமல்படுத்தாமல் சட்டவிதிகளை மீறி செயல்பட்டு வருகின்றன. சம் பளப் பட்டியல், வருகைப்பதி வேடு பராமரித்தல் போன்ற எளிய விதிகள் கூட பின்பற்றப்படுவ தில்லை. மேலும் வார விடுமுறை வழங்க மறுப்பது, தினசரி 12 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை தொடர்ச்சியாக பணியில் தொழி லாளர்களை ஈடுபடுத்துவது, அரசு விடுமுறை நாட்களில் விடுமுறை அளிக்காமல் முன் அனுமதியின்றி வேலையில் ஈடுபடுத்துவது, விடு முறை நாட்களில் வேலை செய்தால் இரட்டிப்பு சம்பளம் தர மறுப்பது மற்றும் சட்டவிரோத காண்ட்ராக்ட் முறையிலும் இயங்கி வருகின்றன.  

இதேபோல், காண்ட்ராக்ட் மற்றும் பீஸ் ரேட் முறையில் பணி யாற்றும் தொழிலாளர்களுக்கு போனஸ் சட்டம் மற்றும் இஎஸ்ஐ, பிஎப் திட்டங்களை அமலாக்க மறுப்பது போன்ற தொழிலாளர் விரோத நடவடிக்கைகளில் ஈடு பட்டு வருகிறது. இத்தகைய நடவ டிக்கைகளால் பனியன் தொழி லாளர்கள் சட்ட, சமூக பாதுகாப்பு இல்லாமல் உதிரி, தொழிலாளர் களாக உள்ளனர். இதுகுறித்து அர சின் கவனத்திற்கு பலமுறை கொண்டு சென்ற போதிலும் தொழிலாளர் சட்டத்தை அமல் படுத்தாமலேயே உள்ளது.  எனவே, அனைத்து பனியன் தொழிற்சாலைகளிலும், தொழி லாளர் மற்றும் தொழிற்சாலை சட்டங்களை அமல்படுத்தவும், அமலாக்க தவறும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தொழிலாளர் நலனை பாதுகாத்திட வலியுறுத்தி திருப்பூரிலுள்ள தொழிற்சாலை இணை இயக்குனர் அலுவலகம் முன்பு  திங்களன்று சிஐடியு  பனியன் மற்றும் பொது தொழிலாளர் சங்கம் சார்பில் கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பனியன் சங்க மாவட்ட பொருளாளர் ஏ.ஈஸ்வரமூர்த்தி தலைமை வகித் தார். சிஐடியு மாநில துணைத் தலைவர் எம்.சந்திரன், மாவட்டத் தலைவர் கே.உன்னிகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் கே. ரங்கராஜ், பனியன் சங்க  தலைவர் சி. மூர்த்தி,  செயலாளர் ஜி. சம்பத் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசி னர்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் பனி யன் சங்க நிர்வாகிகள் கே.நாக ராஜ், எம்.பாண்டியராஜன், ஆர்.மாணிக்கம் மற்றும் பெண்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, இந்த ஆர்ப்பாட் டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையிலும், தடையை மீறி தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக் கைகளை வலியுறுத்தி ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.