tamilnadu

img

தொழிலாளர் நலச்சட்டங்களை பஞ்சாலைகளில் நடைமுறைப்படுத்திடுக

கோவை, ஜூலை 21– பஞ்சாலைகளில் கொத்தடி மைகளாக பணியாற்றும் தொழி லாளர்களை மீட்டு அவர்களுக்கு தொழிலாளர் நலச்சட்டங்களை நடைமுறைப்படுத்த தொழிலாளர் நலத்துறை உறுதியான நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்ட மில் தொழிலா ளர் சங்க மாநாடு வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  கோவை மாவட்ட மில் தொழி லாளர் சங்கத்தின் தலைமை சங்க  மாநாடு ஞாயிறன்று கோவை காட்டூரில் உள்ள மில் தொழிலா ளர் சங்க கூட்டரங்கில் நடைபெற் றது.  மாவட்ட தலைவர் சி.பிரான் சிஸ் சேவியர் தலைமை தாங்கி னார். சிற்றரசு கொடியேற்றினார் பி.ராஜேந்திரன் வரவேற்றார். பஞசாலை தொழிலாளர் சங்க மாநாட்டை துவக்கி வைத்து சம்மேளன பொதுச்செயலாளர் எம்.அசோகன் உரையாற்றினார். மாநாட்டு அறிக்கையை மாவட்ட பொதுச்செயலாளர் சி.பத்மநாபன் முன்மொழிந்தார். நிதிநிலை அறிக்கையை பொருளாளர் என்.ராமமூர்த்தி முன்வைத்தார். மாநாட்டை வாழ்த்தி சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ் ணமூர்த்தி, மாநில துணை தலை வர் எஸ்.ஆறுமுகம் உரையாற்றி னர். இதனைத்தொடர்ந்து மாநாட்டு அறிக்கையின் மீது  மாநாட்டு பிரதிநிதிகள் விவாதித்து அறிக்கையை இறுதி செய்தனர்.  இதனையடுத்து மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய் யப்பட்டனர். தலைவராக சி. பிரான்சிஸ்சேவியர், பொதுச்செய லாளராக சி.பத்மநாபன், பொரு ளாளராக என்.இராமமூர்த்தி, துணைபொதுச்செயலாளர்களாக பி.வேலுசாமி, ராஜேந்திரன் உள்ளிட்ட 15 பேர் கொண்ட  நிர்வாகக்குழு தேர்வு செய்யப்பட் டது. 

தீர்மானங்கள் 

பஞ்சாலை தொழிலாளர்க ளுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை பரிந்துரை செய்திட தமிழக அரசு உடனடியாக குழு அமைத்திட வேண்டும். கோவை மாவட்டத் தில் உள்ள அனைத்து பஞ்சாலை களையும் தொழிலாளர் துறை  ஆய்வு செய்து தொழிலாளர்க ளுக்கான உரிமைகளை பெற்றுத் தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள பஞ்சாலைகளில் தினக் கூலிகளாக வேலை செய்பவர்கள் எவ்வித ஊதிய உயர்வுமின்றி சுரண்டப்படும் நிலையில், இத னைத் தடுத்து சமவேலைக்கு சம ஊதியம் என்பதை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். கோவை மாவட்டத்தில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் மருத்துவர்கள் வரும் நேரம், தொழி லாளர்களிடம் நடந்து கொள்ளும் முறை, விபத்து, விடுப்பு ஆகிய வற்றை உதாசினப்படுத்துவது போன்றவற்றைக் களைந்து, இஎஸ்ஐ நிர்வாகம் மாவட்டம்  முழுவதும் உள்ள மருத்துவசாலை களின் செயல்பாட்டை மேம்ப டுத்தி நடவடிக்கை எடுக்க வேண் டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் இம்மாநாட்டில் நிறை வேற்றப்பட்டன.  மாநாட்டை நிறைவு செய்து சிஐடியு மாநில துணை தலைவர் எம்.சந்திரன் உரையாற்றினார்.   முடிவில் கே.ராஜேந்திரன் நன்றி கூறினார்.