பொள்ளாச்சி, பிப். 22- சீனாவில் பரவும் கொரோனா வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் பொள் ளாச்சி பகுதிகளிலிருந்து தென்னை நார் உற்பத்தி ஏற்றுமதி தொழில் சுணக்கம் அடைந்துள்ள நிலையில், கடன் தொகையினை கட்டுவதற்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்குமாறு கோவை மாவட்ட தென்னை நார் மற்றும் நார் சார்பு பொருட்கள் உற் பத்தியாளர்கள் சங்கத்தினர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கோகோ மேன்ஸ் எனப்படும் கோவை மாவட்ட தென்னை நார் மற் றும் நார் சார்பு பொருட்கள் உற்பத்தி யாளர்கள் சங்கத்தின் கலந்தாய்வுக் கூட்டம் வியாழனன்று நடைபெற்றது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியில் பல ஆயிரம் ஏக்கர் அள வில் தென்னை மரங்கள் வளர்க்கப் பட்டு வருகிறது. தென்னை நார் மற் றும் நார் தொடர்புடைய பொருட்கள் அதிகளவில் அயல் நாடுகளுக்கு ஏற்று மதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலை யில் சமீபத்தில் சீனாவில் கொரோனோ வைரஸ் காய்ச்சல் பரவியது. இதனால் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் அனைத்து விதமான உற்பத்தி பொருட்களும் ஏற்றுமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதில் பொள் ளாச்சியில் பிரதானமாக ஏற்றுமதி செய்துவந்த தென்னை நார் மற்றும் நார் தொடர்புடைய உற்பத்தி பொருட் களுக்கும் பாதுகாப்பு கருதி, அந்நாட்டு அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இதனால் தென்னை நார் மற்றும் நார் தொடர்புடைய உற்பத்தி பொருட் களை சீனாவிற்கும், கொரோனோ வைரஸ் பரவியுள்ள சில வெளிநாடுக ளுக்கும், இந்தியாவின் சில நகரங்க ளுக்கும் ஏற்றுமதி செய்வதில் சுணக் கம் அடைந்துள்ளது. ஆகவே, தென்னை நார் மற்றும் நார் சார்பு பொருட்கள் உற்பத்தியாளர்கள் வாங்கிய வங்கிக்கடனை திருப்பி செலுத்த ஓராண்டு விலக்கு அளிக்கு மாறு கலந்தாய்வு கூட்டத்தில் வலியு றுத்தப்பட்டது.