tamilnadu

img

ஓய்வூதிய கேட்பு மனுக்களுக்கு உடனடியாக அரசாணை வழங்கிடுக

திருப்பூரில் நலவாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

திருப்பூர், அக்.16 - ஓய்வூதிய கேட்பு மனுக்க ளுக்கு உடனடியாக அரசாணை  வழங்கிடக்கோரி திருப்பூரில்  அமைப்பு சாராத் தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தை முற்று கையிட்டு தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. திருப்பூர் மாவட்ட அனைத்து கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிற்சங்கங்களின் கூட்ட மைப்பு சார்பில் செவ்வாயன்று மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகிலுள்ள நலவாரிய அலுவலகம் முன்பாக நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நிலுவையில் உள்ள ஓய்வூதிய கேட்பு மனுக்களுக்கு உடன டியாக அரசாணை வழங்க வேண் டும், அடையாள அட்டை, ஓய்வூ தியம் ரூ.6 ஆயிரம், விபத்து மரண இழப்பீடு ரூ.5 லட்சம், இயற்கை மரண இழப்பீடு ரூ.2 லட்சம், மகப்பேறு கால விடு முறைச் சம்பளம், கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, தாலிக்குத் தங்கம் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி முழக்கங்கள் எழுப்பப் பட்டன. முன்னதாக இந்த ஆர்ப்பாட் டத்தில் எல்பிஎப் சார்பில் ரங்க சாமி, முத்துசாமி, ஐஎன்டியுசி சார்பில் சிவசாமி, மணியன், ராஜேந்திரன், கவிதா மணிவாச கம், வளர்மதி, பெருமாள், சுப்பிர மணியம், இஸ்மாயில், எம்எல்எப் சார்பில் பாண்டிய ராஜன், கணே சன், சம்பத், எச்எம்எஸ் சார்பில்  முருகன், கலைச்செல்வன், உடு மலை உடலுழைப்பு தொழிற்சங் கத்தைச் சேர்ந்த குணசேகரன், செல்வராஜ் உள்ளிட்டோர் பங் கேற்றனர். இதில் பெருந்திர ளான தொழிலாளர்கள், பெண் தொழிலாளர்கள் கலந்து கொண் டனர்.