tamilnadu

மனித கழிவுகளை மனிதரே அகற்றும் அவலம்: சட்டத்தை அமலாக்க தேசிய துப்புரவு ஆணைய உறுப்பினர் அறிவுரை

திருப்பூர், மார்ச் 17 – மனிதக்கழிவுகளை மனிதரே அகற்றும் அவலத்தைப் போக்க சட்டத்தை அமல்படுத்துவதை உறுதிப்படுத்துமாறு தேசிய துப்புரவு மறுவாழ்வு ஆணைய உறுப்பினர் ஜெகதீஸ் ஹிர்மானி அதிகாரிகளுக்கு அறிவுரை கூறி னார். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாயன்று சுகாதார பணியாளர்கள் நலன் குறித்த அனைத்து துறை அலுவ லர்களுடனான ஆய்வுக் கூட்டம் தேசிய துப்புரவு மறுவாழ்வு ஆணைய உறுப்பினர் ஜெகதீஸ் ஹிர்மானி தலைமையில் நடை பெற்றது.

இக்கூட்டத்தில் ஜெகதீஸ் ஹிர்மானி கூறியதாவது: உள் ளாட்சிகளில் பணியாற்றும் துப் புரவு பணியாளர்களுக்கு தேவை யான அடிப்படை பாதுகாப்பு உப கரணங்கள் உள்ளதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண் டும். நிரந்தர மற்றும் தற்காலிக பணியாளர்கள் காப்பீட்டுத் திட் டத்தில் இணைந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். பொதுமக்கள், தனியார் நிறு வனங்கள், குறித்த காலத்திற்குள் தங்களும் கழிவுக்குழிகளை நவீன இயந்திரங்களை பயன்படுத்தி துப்புரவு செய்ய வேண்டும். மனித கழிவுகளை மனிதனே அள்ளு வதற்கு தடை செய்தல் மற்றும் மறுவாழ்வு சட்டத்தினை நடை முறைப்படுத்துவதை மாநக ராட்சி ஆணையர், நகராட்சி ஆணையாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூ ராட்சியின் செயல் அலுவலர்கள் ஆகியோர் முறையாக கண் காணிக்க வேண்டும் என்று கூறி னார்.

முன்னதாக திங்களன்று நடை பெற்ற வாராந்திர மக்கள் குறை தீர்க் கூட்டத்தில், சிஐடியு ஊரக உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில் ஐநூறுக்கும் மேற்பட்ட கிராமப்புற உள்ளாட்சி துப்புரவு ஊழியர்கள் பாதுகாப்பு உபகர ணங்கள் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து மனு அளித் ததுகுறிப்பிடத்தக்கது. பெரும் பாலான உள்ளாட்சிகளில் எந்த முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு உபகரணங்களும் துப்புரவுப் பணியாளர்களுக்குத் தரப்படுவ தில்லை. ஆனால் இதுபோன்ற கூட்டங்களில் அதிகாரிகள் அறிவுரை கூறுவது மட்டும் வழக்கமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாகத் துப்புரவு பணியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.