tamilnadu

img

லாக்கப்பில் மதன்குமார் மரணமடைய காரணமான காவல்துறையினர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திடுக

மனித உரிமை பாதுகாப்புக்குழு வலியுறுத்தல்


தருமபுரி, செப்.15- லாக்கப்பில் தலித் இளைஞர் மதன்குமார் மரணமடைவதற்கு காரணமான காவல்துறையினர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டு மென என தமிழக அரசை மனித உரிமை பாதுகாப்புக்குழு வலியு றுத்தியுள்ளது. கிருஷ்ணகிரிமாவட்டம், போச்சம்பள்ளி வட்டம் புளியாண்ட பட்டி கிராமம் தலித் சமூகத்தை சேர்ந்த ஜெகநாதன் மகன் மதன் குமார் (20).  இவரை செப்டம்பர்  5 ஆம் தேதியன்று கிருஷ்ணகிரி  குற்றப்பிரிவு காவல்துறையினர்   விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இத்தகவலறிந்த மதன்குமாரின்  பெற்றோர்   செப்டம்பர் 7ஆம் தேதி விடு விக்கும்படி காவல்துறையினரிடம்  கேட்டுக் கொண்டனர். ஆனால் காவல்துறையினர் விடுவிக்க  மறுத்துள்ளனர். இந்நிலையில்  செப்டம்பர் 8 ஆம் தேதியன்று  காவல்துறையினர் ஊத்தங்கரை  மருத்துவமனையில் மதன் குமாரை சிகிச்சைக்காக அனுமதித் துள்ளனர். இதையடுத்து மதன் குமார் இறந்து விட்டதாக பெற் றோருக்கு காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.  தகவ லறிந்த உறவினர்கள் மதன்குமார் கிருஷ்ணகிரி காவல்நிலைய லாக்கப்பிலேயே அடித்துக் கொல் லப்பட்டுள்ளார் என உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளார்.  இந்நிலையில் மதன்குமார் மரணம் குறித்து உண்மை  அறிவ தற்காக மனித உரிமை பாதுகாப்புக் குழுவின் மாநில உறுப்பினர்  எம். குணசேகரன் தலைமையில், கோவை வழக்கறிஞர் ச.சீலாராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.கோவிந்தசாமி, ஊத்தங்கரை ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி தரும புரி மாவட்டச் செயலாளர் வழக் கறிஞர் டி.மாதையன் உள்ளிட் டோர் ஆய்வு மேற்கொண்டனர்.  இந்த ஆய்வில் மதன்குமாரின் பெற்றோர் மற்றும் உறவினரிடம் விசாரணை மேற்கொண்டனர். மதன்குமாருக்கு சிகிச்சையளித்த தாக கூறப்படும் ஊத்தங்கரை அரசு  மருத்துவ அதிகாரி மற்றும் சிகிச்சை யளித்த மருத்துவர்களிடம் விசா ரணை மேற்கொண்டனர்.   மேலும் மத்தூர் காவல் ஆய்வாளர் பழனிச் சாமி, கே.ஆர்.பிடேம் காவல்துறை அதிகாரிகள், கிருஷ்ணகிரி மாவட்ட  குற்றப்பிரிவு துணை கண்காணிப் பாளர் குமார், கிருஷ்ணகிரி டவுன்  காவல்நிலையம் மற்றும்  உடற் கூறு ஆய்வுசெய்த தருமபுரி அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த ஆய்வில், மதன்குமார் உயிரிழப்பிற்கு காரணமான காவ லர்கள் மீது வழக்குப் பதிவு செய்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தாழ்த்தப்பட்ட- பழங்குடி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மதன்குமார் மரணம் குறித்த வழக்கை சிபி சிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மதன்குமார் குடும் பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை,  இழப்பீடாக ரூ.50 லட்சம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனித உரிமை பாதுகாப்பு குழு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.