tamilnadu

img

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கௌரவமாக ஊருக்கு அனுப்பிடுக

கோவை, மே 15 -   கோவை மாவட்டத்தின் வளர்ச் சிக்காக உழைத்த புலம்பெயர் தொழிலாளர்களை ஊருக்கு அனுப் புவது அரசின் கடமையாகும். ஆகவே, அவர்களை கௌரவமாக ஊருக்கு அனுப்பிட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் கோவை மாவட்டக் குழு கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் சிறு, குறு தொழில் நிறு வனங்கள்,  கல்வி நிலையங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு முழு ஊதியம் வழங்கப்பட வேண்டும். கல்வி கட்டணத்தை கட்ட நிர்பந்திக்கும் கல்வி நிறு வனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆட்டோ, கட்டிட தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்.  விவசாயிகள் கொண்டு வந்து சேர்க் கும் பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள் ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்களை தொகுத்து வியாழனன்று மாலை கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி,  மாநி லக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் எஸ்.கிருஷ்ணமூர்த்தி,  கே.அஜய்குமார் உள்ளிட்டோர் கோவை மாவட்ட ஆட்சியர் கு. இராசமணியை நேரில் சந்தித்து வழங்கினர்.

இதன்பின்னர் செய்தியாளர் களிடம் பி.ஆர்.நடராஜன் எம்.பி., பேசுகையில்,  கோவையில் கடந்த இரு நாட்களாக புலம் பெயர் தொழிலாளர்கள் ஊருக்கு செல்ல வேண்டும் என கூட்டம் கூட்ட மாக வந்து கொண்டு இருக்கின் றனர்.  ஆகவே, கோவை மாவட் டத்திற்கு உழைத்த வெளிமாநில தொழிலாளர்களை மரியாதை யோடு கௌரவமாக ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.  தொழி லாளிகள் இல்லை என்றால் தொழில் பிரச்சனை ஏற்படும் என சொல்லும் முதலாளிகள், இந்த ஊரடங்கு காலத்தில் அவர்களுக் கான தேவையை நிறைவேற் றுவதற்கு எந்த முயற்சியும் மேற் கொள்ளவில்லை. ஆனால், இப் போது தொழில் செய்வதற்கு ஆட் கள் பற்றாக்குறை ஏற்படும் என புலம்புகின்றனர். ஆகவே, ஊருக்கு செல்கிறோம் என்று சொல்பவர் களை உரிய ஏற்பாடுகளை செய்து மாவட்ட நிர்வாகம் அனுப்பி வைக்க வேண்டும். இங்கேயே இருக்கிறோம் என்கிற தொழிலா ளர்களை முறையாக பராமரிக்க  வேண்டும். 

அவர்களுக்கு ரேசன் பொருட்கள் வழங்க வேண்டும்.  ஆதார் கார்டு அடிப்படையில் 1000 ரூபாய் அவர்களுக்கு  வழங்கிட வேண்டும்.   இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாநிலத்தின் தலைமை செயலாள ரோடு பேசி அவர்களுக்கு நிவாரண தொகை வருவதை உறுதி செய்திட வேண்டும். அப்போதுதான் வெளி மாநில தொழிலாளர்கள்  சாலைக்கு வருவதை தவிர்க்க முடியும்.  கோவை யில் புலம்பெயர்ந்த தொழிலா ளர்களை ஊருக்கு அனுப்பி வைப் பதில் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் தலைமையில் ஒரு குழு சிறப்பாக செயல்படுகிறது என்றா லும், அந்த குழுவின் பலம் போத வில்லை என்றே கருதுகிறோம். தொழிலாளர்களை ஊருக்கு அனுப்பும் நிர்வாக நடைமுறையில் கோளாறு  இருக்கின்றது.  அதை சரிபடுத்தி பலப்படுத்த வேண்டும்.

மேலும், கொரோனா இல்லாத மாவட்டமாக கோவை மாறியி ருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதே நேரத்தில்  கோவை மாவட்டத்தில் தினம் எவ்வளவு சோதனைகள் எடுக்கப்படுகின்றது. கொரோனா தொற்று இல்லை என்று எந்த அடிப்படையில் அறிவிக்கின்றீர் கள் என்பதை மாவட்ட நிர்வாகம் தெளிவுபடுத்த  வேண்டும்.  மாவட்ட அமைச்சரும்,  ஆட்சியரும் தொற்று இல்லை என தங்களை தாங்களே முதுகு தட்டிக்கொள்ளுவது நம்மை நாமே ஏமாற்றுவதை போன்றது.  அலட்சியமாக இருந்துவிட்டு பின் னர் நோய்த்தொற்று பரவலாக ஏற்பட்டால் மக்கள் அச்சத்திற்கு உள்ளாக்கப்படுவர். ஆகவே பரி சோதனைகளை அதிகரிக்க வேண் டும். பொதுமக்களுக்கு மருத்துவ பரி சோதனை செய்வது என்பது ஒரு புறம் இருந்தாலும் குறைந்தபட்சம் இருபதுக்கும் குறையாமல் இருக்கும் நிறுவனங்களில்   தொழி லாளர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட வேண்டும். இப்படியான மருத்துவ பரி சோதனை மேற்கொண்ட பிறகு எங்கள் மாவட்டத்தில் கொரோனா தொற்று இல்லை என்று பெரு மையோடு சொல்லலாம். ஆனால் எந்த மருத்துவ பரிசோதனையும் செய்யாமல் கொரோனா இல் லாத மாவட்டம் என்று அறிவிப் பது ஏற்புடையதாகாது. உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிற நிலையில் முன்னெச்சரிக்கை என் கிற நிலையில் இந்த அடிப்ப டையான பரிசோதனையை மேற் கொள்ள வேண்டும். அப்போது தான் மக்களும் அச்சமில்லாமல் இருக்க முடியும்.

தற்போது நமது பிரதமர் மற் றும் நிதியமைச்சர் ரூ.20 லட்சம் கோடிக்கு திட்டங்கள் என்று அறி வித்துள்ளார். இதற்கான நிதி எங்கு உள்ளது என்பதை வெளிப் படையாக தெரிவிக்க வேண்டும். ஏற்கனவே நாடு கடனில் உள்ளது. மாநிலங்களும் கடனில் உள்ளது. ஒவ்வொரு மாநிலங்களும் இந்த கொரோனா தடுப்பு பணிக்காக தலா 10 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டுக் கொண்டுள்ளது. அனைத்து மாநி லங்களுக்கும் இந்த தொகையை கொடுத்தால் சுமார் நான்கு லட் சம் கோடி ரூபாய்தான் செலவா கும்.  மக்கள் நெருக்கமாக உள்ள மாநிலங்களுக்கு இந்த நிதியை அளித்தால்தான் அவர்கள் தங்க ளது பணியை திறம்பட மேற் கொள்ள முடியும். இதனை விடுத்து வங்கிகள் பணம் கொடுப் பார்கள் என்பது போன்ற தெளி வற்ற அறிவிப்புகள் பயன்படாது. மேலும் கடந்த காலத்தைப்போல இந்த சலுகைகள் பெருமுதலா ளிகளுக்குத்தான் போய்ச்சேரும் என்று சொன்னால் இந்த நாட்டில் பெரும் எழுச்சியும், போராட்டமும் நடைபெறும் என்று மத்திய அரசை எச்சரிக்க விரும்புகிறோம். உழைக்கும் வர்க்கத்தோடு உறவு என்கிற வகையில் அன்போடு, கருணையோடு பார்க்கவில்லை என்றால் இந்த வர்க்கம் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முயற்சி களை மேற்கொள்ளும். இவ்வாறு பி.ஆர்.நடராஜன்,எம்,பி.,கூறி னார்.