அவிநாசி, ஜூலை 24- அவிநாசியை அடுத்த சேவூர் வேளாண் குடியி ருப்பு,நெடுஞ்சாலைத் துறை சுவற்றில் அனுமதி பெறாமல் இந்து முன்னணி யினர் விளம்பரம் செய்து வருகின்றனர். அவிநாசி ஒன்றியத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஒரு மாதத் திற்கு முன்பே அரசு வேளாண் குடியிருப்பு கட்டி டம் மற்றும் நெடுஞ்சா லைத்துறைக்கு சொந்தமான பாலங்க ளில் அரசு அனுமதி பெறாமல் இந்து முன்னணியினர் சுவர் விளம்பரங்கள் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்ற னர். மேலும் கருவலூர் ஊராட்சி பகுதியில் வேளாண் குடியிருப்பில் இருந்து விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு இலவசமாக மின்சாரம் வழங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து வேளாண் துறை அதிகாரி அருள்வடிவிடம், இந்து முன்னணியினர் சுவர் விளம்பரம் செய்வதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளதா? என கேட்டதற்கு, அவர் இதுவரை அனுமதி பெறவில்லை என்றார். மேலும் கருவலூர் ஊராட்சியில் வேளாண் குடியிருப்பு பகுதிகளில் இருந்து விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக இலவச மின்சாரம் வழங்கப்படுவதாக கூறப்படுவது குறித்து கேட்டபோது, இதுவரை எங்களுக்கு தெரியாது என்றார். மேலும், வேளாண் குடியிருப்புகள் சமூக விரோதமாக கூடார மாக மாறி வருவது குறித்து கேட்டபோது, இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு நடவடிக்கை எடுத்து வேளாண் குடியிருப்பு பாதுகாக்கப் படும் என தெரிவித்தார். இதேபோல் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி சந்திரசேகர் கூறியதாவது, ஆட்டையாம்பாளையம் அருகில் கோவை செல்லும் சாலையில் நெடுஞ்சாலைத்துறை சுவர்களில் இந்து முன்னணியினர் விளம் பரம் செய்து உள்ளனர். இதற்கு அனுமதி பெறவில்லை. இதன் மீது ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரி வித்தார்.