மேட்டுப்பாளையம், அக்.17- மேட்டுப்பாளையம் அடுத்துள்ள லிங்காபுரம் பகுதியில் காட்டாற்று வெள்ளத்தால் உயர்மட்ட பாலம் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் மலைக்கிராம மக்கள் ஆபத்தான சூழலில் ஆற்றை கடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளை யத்தை அடுத்துள்ள லிங்காபுரம் பகுதியில் காந்தவயல், காந்தையூர், உளியூர், ஆளூர் என நான்கு மலையடிவார கிராமங்கள் உள்ளன. இங்குள்ள சிறு நகரான லிங்கா புரத்திற்கும் காந்தவயலுக்கும் இடையே காந்தையாறு என்னும் காட்டாறு கடக் கிறது. நீலகிரி மலையில் உள்ள கோத்த கிரி பகுதியில் பெய்யும் மழை நீர் இந்த காந்தயாறு வழியாக பவனியாற்றில் கலக்கின்றது. பவானிசாகர் அணையின் நீர்தேக்க பகுதியில் அமைந்துள்ள இப் பகுதியில், கடந்த 2004 ஆம் ஆண்டு காந்தை யாற்றின் குறுக்கே பழங்குடியினர் நலத் திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சம் செலவில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. ஆற் றின் கீழ் மட்டத்தில் இருந்து 20 உயரத் திற்கு பாலம் கட்டப்பட்ட போது பாலத் தின் உயரத்தை குறைந்தபட்சம் 32 அடியாக உயர்த்தி கட்டினால் மட்டுமே வெள்ளப்பெருக்கு காலத்தில் பவானி சாகர் அணையின் நீர்மட்ட உயரம் அதி கரித்தாலும் பாலம் நீரில் மூழ்காது என உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். ஆனால், கிராம மக்களின் கருத்து ஏற்கப்படாமல் ஏற்கனவே திட்டமிட்டபடி 20 அடி உயரத்திலேயே கட்டப்பட்டது. இத னால் இப்பாலம் கட்டப்பட்டது முதல் பலமுறை நீருக்கடியில் மூழ்குவதும் நீர் வடிந்த பின்னர் வெளி வருவதுமாக உள்ளது. குறிப்பாக இப்பகுதி பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதி என்பதால் அணையின் நீர்மட்டம் நூறு அடியை கடந்தால் இப்பாலம் மூழ்க துவங்கிவிடும். இந்நிலையில் தற்போது பெய்து வரும் கனமழையால் பில்லூர் அணை நிரம்பி அதன் உபரி நீர் பவானியாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் நூறு அடியை தொட்டு விட்டது. இதன்கார ணமாக இப்பாலம் மீண்டும் மூழ்கியுள்ள துடன், பாலத்தை தாண்டி தண்ணீர் செல்கிறது. இதனால் இப்பாலத்தின் மீது பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவியர் ஆபத்தான சூழலில் பள்ளி செல்ல வேண் டியுள்ளது. சற்று தவறினாலும் நீரில் மூழ்கி விடும் ஆபத்தான சூழலில் பாலத்தின் மீது பயணிக்கின்றனர். நீருக்கடியில் மூழ்கிய இப்பாலம் இன் னும் மூன்று நாட்களுக்கு மேல் நீருக் கடியிலேயே இருக்கும் என்பதால் அப் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் மீண் டும் பழையபடி பரிசல் பயணத்தை துவக்க உள்ளனர். பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் விளை பொருட்களை சந்தைக்கு எடுத்து செல்லும் விவசாயிகள் போன் றோர் இதனால் மிக கடுமையாக பாதிக் கப்படுகின்றனர். காட்டாற்றில் பரிசல் பயணம் ஆபத்தானது என்ற போதும் தங்களுக்கு வேறு வழியில்லை என வேதனையுடன் இப்பகுதி கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும் போது யாரும் ஆற்றை பரிசல் மூலம் கடக்கக்கூடாது என அறிவிக்கப்படுகிறது. ஆனால் தற்போது பாலம் மூழ்கி துண்டிக் கப்பட்ட போக்குவரத்து காரணமாக பொது மக்கள் பரிசல்களையே பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதேநேரம், அடிக்கடி நீருக்குள் மூழ்கி காத்தையாற்று பாலம் சேதமடைந்து விட்டதால், இம் முறை வெள்ளம் வடிந்த பின்னர் பாலத்தை புதுப்பித்து, தற்போது உள்ளதை காட்டி லும் கூடுதலாக உயர்த்தி கட்டுவது அவசி யம் என்று இப்பகுதி மக்கள் வலியுறுத்து கின்றனர்.