தேனி:
தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றிய வனப்பகுதியில் அரசரடி, இந்திராநகர், பொம்மராஜபுரம் உள்ளிட்ட ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்த மலைக் கிராம மக்களை வனப்பகுதியில் இருந்து வெளியேற்ற கடந்த சில ஆண்டுகளாக வனத்துறையினர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மலைக்கிராம மக்கள் வனத்துறையினர் நடவடிக்கைக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் தற்போது வரை தீர்வு கிடைக்கவில்லை. இந்தநிலையில் வியாழனன்று அரசரடி கிராமத்தைச் சேர்ந்த சிலர் வீட்டு உபயோகத்திற்காக லாரியில் மண்ணெண்ணெய், டீசல்,எடுத்துச் சென்றனர். மஞ்சனூத்து சோதனைச்சாவடியில் லாரியைநிறுத்தி சோதனை செய்த வனத்துறையினர் டீசல், மண்ணெண் ணெய்யை பறிமுதல் செய்தனர்.
மக்கள் வனத்துறையினரிடம் கேட்டதற்கு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது எனத் தெரிவித்தனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த மேகமலைஊராட்சித் தலைவர் பால்கண்ணன் வனத்துறையினரிடம் பேச்சுவார்த்தைநடத்தினார். வனத்துறையினர். டீசல், மண்ணெண்ணெய்யை எடுத்துச் செல்ல அனுமதி மறுத்துவிட்டனர். இதுதொடர்பாக மேகமலை ஊராட்சித் தலைவர் கூறுகையில் “மலைக்கிராம மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை வனத்துறையினர் நிறுத்தவில்லையென்றால் போராட்டம் நடத்தப்படும் என்றார்.