சேலம், மே 17-சேலத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த சூறை காற்றுடன் கனமழை பெய்ததுஇதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.கோடை வெயில் வாட்டி எடுத்துவந்த நிலையில் கத்திரி வெயில் தொடங்கிய நாள் முதலே சேலம் மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் ஒவ்வொரு நாளும் நூறு சதத்தை கடந்து. அதிகபட்சமாக 105.5டிகிரி வரை வெப்பம் வாட்டி எடுத்து அனல் காற்று வீசி வந்தது. இந்நிலையில் வெள்ளியன்று சேலம் மாநகரம் முழுவதும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இந்த கனமழையினால் நகரின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாலையில் சாய்ந்து மின் வயர்கள் அருந்தும் இருளில் மூழ்கின. இந்த பலத்த மழையினால் சேலம் மாநகர் முழுவதும் குளிர்ந்த நிலையில் காணப்பட்டது. இந்த மழையினால் வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் மலைச்சாரலை அனுபவித்தனர்.