tamilnadu

அதிமுக கொடி மரம் விழுந்து விபத்து கால்களை இழந்த பெண்ணுக்கு அரசு வேலை வழங்குக

கோவை, நவ. 18- கோவையில் அதிமுக கொடிகம்பம் சாய்ந்து விபத்தில் காலை இழந்த ராஜேஸ் வரிக்கு அரசு வேலை தரவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது, கோவை- அவினாசி சாலையில் கடந்த 11 ஆம் தேதி அதிமுக கொடிகம்பம் சாய்ந்து விபத்துள்ளா னதில் ராஜேஸ்வரி என்கிற பெண் கடுமை யாகப் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. 4 அறுவை சிகிச்சைகள் செய் யப்பட்டு, இடது கால் அகற்றப்பட்ட நிலை யில், மேலும் இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டுமென மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.  இந்நிலையில், ராஜேஸ்வரியின் வரு வாயை நம்பியே அவரின் குடும்பம் உள்ள தால் இந்த விபத்து ராஜேஸ்வரியின் குடும் பத்தையே நிலைகுலைய வைத்துள்ளது.போக்குவரத்திற்கு இடையூறாக பேனர் உள்ளிட்டவைகளை வைக்கக்கூடாது என தொடர்ந்து நீதிமன்றம் வலியுறுத்தி வந் துள்ளது. ஆனாலும் இக்கலாச்சாரம் ஆளுங்கட்சியினரால் தொடர்ந்து முன் னெடுக்கப்படுவது வேதனையளிப்பதாக உள்ளது. சட்டத்தை முழுமையாக அமல் படுத்தப்பட வேண்டிய ஆளும் கட்சியி னரே இதுபோன்ற விதிமீறல் நடவ டிக்கையில் ஈடுபடுவதை ஒருபோதும் ஏற்கமுடியாது. சமீபத்தில் சென்னையில் ஒரு பெண்ணின் உயிரை பலிவாங்கிய நிலையில், தற்போது கோவையில் ஒரு பெண்ணின் காலை அகற்ற வைத்துள்ளது. இளம் வயதில் தனது கால்களை இழந்து வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ள இப்பெண்ணிற்கு உயர் மருத்துவ சிகிச்சையை அளிக்க தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இவரின் வருவாயை  நம்பியே இவரின் குடும்பம் உள்ள நிலையில் நிலைகுலைந்து போயுள்ள இவரின்  குடும்பத்திற்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் ராஜேஸ்வரிக்கு அரசு வேலை அளிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. முன்னதாக மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வரும் ராஜேஸ்வரியை சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சந்தித்து அவர்களது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தனர்.