tamilnadu

img

ஒருங்கிணைந்த நீதி, மனிதவள மேம்பாட்டு திட்டத்தை கைவிடுக

தருமபுரி, ஜூன் 26- ஒருங்கிணைந்த நீதி மற்றும் மனிதவள மேம்பாட்டு திட்டத்தை அவசரகதியில் அமல்படுத்தும் நடவ டிக்கையை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் தருமபுரி, சேலம் மாவட்ட கருவூல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைந்த நீதி மற்றும் மனித வள மேம்பாட்டுத் திட்டம் சுமார் ரூ.300 கோடி செலவில் விப்ரோ  நிறுவனத்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. விப்ரோ நிறுவனம் கொடுத்த பணிகளை முடிக்க முடியா மல் திணறி வருகிறது. இந்நிலையில் பலவித குறைபாடுள்ள ஒரு மென் பொருளை வைத்துக்கொண்டு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சந்தேககளுக்கு உடனடி விளக்கம் கிடைக்கப் பெறாத நிலையில் சம்ப ளப் பட்டியலை சமர்ப்பிக்க வேண் டும். அப்படி தராவிட்டால் சம்ப ளம் கிடையாது என்ற ரீதியில் மிரட் டும் போக்கினை தமிழக அரசு உட னடியாக கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் அனைத்து மாவட்ட கருவூ லங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதன்ஒருபகுதியாக தருமபுரி மாவட்ட கருவூல அலுவலகம் முன்பு சங்கத்தின் மாவட்ட தலைவர் எம். சுருளிநாதன் தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் ஏ.சேகர், மாவட்ட பொருளாளர் கே.புகழேந்தி, மாவட்ட துணை தலைவர் எம்.சிவப் பிரகாசம், மகளிர் துணைக்குழு மாவட்ட அமைப்பாளர் பி.எஸ்.இள வேனில், கூட்டுறவுத்துறை ஊழி யர்சங்க மாவட்ட தலைவர் ஜி.பழனி யம்மாள், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் என்.ராமஜெயம் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சேலம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் உள்ள மாவட்ட கருவூல கத்தின் முன் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் முருகம்பெருமாள்  தலைமையில் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட் டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், தமிழக அர சையும், ஆட்சியாளர்களையும் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.