அனைத்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்
திருப்பூர், அக். 10 – அனுப்பர்பாளையம் மற்றும் சுற்று வட்டாரத்தில் பாத்திரப் பட்டறைகளில் வேலை செய்யும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழி லாளர்களுக்கு கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதல் போனஸ் தொகையை தீபாவளி பண்டி கைக்கு 10 நாட்களுக்கு முன்பாக வழங்குமாறு அனைத்து தொழிற் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. அனுப்பர்பாளையம் எல்பி எப் சங்க அலுவலகத்தில் வியா ழக்கிழமை அனைத்து பாத்திரத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. காமாட்சி யம்மன் பாத்திரத் தொழிலாளர் சங்கத் தலைவர் பி.வி.முத்து கிருஷ்ணன் தலைமையில் நடை பெற்ற இக்கூட்டத்தில் சிஐடியு சங்கத் தலைவர் ஏ.ஆறுமுகம், பொருளாளர் குபேந்திரன், எல்பி எப் நிர்வாகிகள் வேலுச்சாமி, தர்மலிங்கம், ஏஐடியுசி நிர்வாகி கள் செல்வராஜ், நாகராஜ், காமாட் சியம்மன் சங்க நிர்வாகி அர்ஜூ னன், ஐஎன்டியுசி நிர்வாகி வி.ஆர். ஈஸ்வரன், எச்எம்எஸ் சார்பில் திரு ஞானம், சுப்பிரமணியம், ஏடிபி சார்பில் தேவராஜன், பிஎம்எஸ் சார்பில் செந்தில்குமார், மாதவன் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பாத்திரத் தொழிலாளர்களுக்கு 2019ஆம் ஆண்டு போனஸ் குறித்து விவா திக்கப்பட்டது. பாத்திர பட்டறை உரிமையாளர்கள் இந்த ஆண்டு தொழிலாளர்களுக்கு போனஸ் தொகையை கடந்த ஆண்டைக் காட்டிலும் ஒரு சதவிகிதம் கூடுத லாக வழங்குவதுடன், தீபாவளி பண்டிகைக்கு 10 நாட்களுக்கு முன்பாக பட்டுவாடா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
லாட்டரிக்கு தடை விதிக்க கோரிக்கை
மேலும், அனுப்பர்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிக ளில் தொழிலாளர்களை, இளை ஞர்களை சீரழிக்கும் ஒரு நம்பர் ஆன்லைன் லாட்டரி விற்பனை மறைமுகமாக அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதைத் தடுத்து நிறுத்தவும், சட்டவிரோத லாட்டரி விற்பனையில் ஈடுபடு வோர் மீது சட்டப்படி நடவ டிக்கை எடுக்கவும் திருப்பூர் மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் உடனடியாக தலை யிட வேண்டும் என்றும் இக்கூட் டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.