ஈரோடு, ஜூலை 10- ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி ஆகிய அமைப்புகளிடமிருந்து தங்களது வழி பாட்டு தளங்களுக்கு பாதுகாப்பு கேட்டு கிறிஸ்துவ அமைப்பினர் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டம் முழுவதும் இந்துத் துவ அமைப்புகள் தொடர்ந்து கிறிஸ்துவ தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்து வதுடன், வழிபாடுகள் நடத்தவும் இடை யூறு செய்து வருகிறார்கள். குறிப்பாக, ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி ஆகிய அமைப்புகளிடம் இருந்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்துவ சபைகளையும், வழிபாடுகளையும் காக்க வேண்டும். மேலும், அவர்களிடம் இருந்து எங்களது உயிருக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். மத நல்லிணக்கத்தையும் மற்றும் சட்ட ஒழுங்கு சீர் கெடும் வகையில் ஆபத்தான செயல்களை செய்யும் தனி நபர் அல்லது தனி அமைப்பின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கிறிஸ்துவ போதகர்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலியு றுத்தி ஈரோடு மாவட்ட காவல் கண் காணிப்பாளர் சக்திகணேசிடம் பல்வேறு கிறிஸ்துவ அமைப்பினர் மனு அளித்தனர்.