tamilnadu

img

சாலையின் குறுக்கே சாய்ந்து பயமுறுத்தும் விழிப்புணர்வு பதாகைகள் அச்சத்தில் வாகன ஓட்டிகள்

பொள்ளாச்சி, ஜூலை 9- பொள்ளாச்சி பேருந்து நிலையம் முன்பு காவல் துறை யினரின் விழிப்புணர்வு பதாகைகள் சாலையின் குறுக்கே சாய்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே அப்ப குதியை கடக்கம் சூழல் நிலவுகிறது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி பழைய பேருந்து நிலைய சிக்னலையொட்டி சாலையோரம் போக்குவரத்து காவல் துறையினரின் விழிப்புணர்வு விளம்பர பதாகை களை வைத்துள்ளனர். இந்த பதாகைகள் காற்றில் சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்துள்ளது. இதனால் அவ்வழியே பயணிக்கும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட் டிகள் மிகுந்த அச்சத்துடனேயே அப்பகுதியைக் கடந்து செல்கின்றனர். ஆகவே, இதனை உடனடியாக அப்புறப் படுத்த வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

;