tamilnadu

img

அரசு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி முகாம்

ஈரோடு, ஜூன் 30- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர் வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுக ளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் துவக்க விழா சனிக்கிழமை அன்று ஈரோட் டில் நடைபெற்றது. தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர் 397, இளநிலை உதவியாளர் 2792, தட்டச்சு 1901, வரி வசூலிப்பவர் 34, சர்வே யர் 509, வரைவாளர் 74, சுருக்கு தட் டச்சர் 784 என 6,491 காலிப் பணியிடங் களுக்கு தமிழந்ாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. இதற்கான தேர்விற்கு பயிற்சி வகுப்புகள் அம்பேத்கர் கல்வி வேலை வாய்ப்பு பயிற்சி மையம் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் ஈரோடு பகுதியில் இலவசமாக நடத்தப் படுகிறது. இவ்வகுப்புகள் துவக்க விழா சனியன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் நிர்வாகிகள் கே.எஸ்.எஸ்.ஆர்.எம்.பி. விஜயகுமார், கே நடராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில பொது செயலாளர் ப.மாரிமுத்து அனை வரையும் வரவேற்றார். நிர்வாகிகள் க.கணேஷ், தாஜ் மூஹயித்தீன், சீனி அஜ்மல்கான், ஜெயசங்கர், ஜோதி, ஜெய்கணேஷ், இஸ்மாயில் உட்பட பலர் பங்கேற்றனர்.