கோவை, ஜூன் 18– கோவை மாநகராட்சியின் அத்துமீறிய செயலைக் கண்டித்து ஜீவா நகர் பகுதி மக்கள் நடத்திய போராட்டத்தையடுத்து அனைவரும் கைது செய்யப்பட்டனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளை யம் சாலையில் உள்ள ஜீவா நகரில் 40 ஆண்டுகளுக்கு மேலாக 100க்கும் மேற் பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இம்மக்களை அப்புறப்படுத்த கோவை மாநகராட்சி நிர்பந்தித்து வருகிறது. இதற்கிடையே மாநகராட்சி மற்றும் நகரமைப்பு துறையினர் அப்பகுதியில் குடிநீர் மற்றும் மின் இணைப்புகளைத் துண்டிப்போம் என தொடர்ந்து அச்சு றுத்தி வந்தனர். தங்களின் குடியிருப்பை பாதுகாத்துக்கொள்ள இப்பகுதி மக்களும் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் செவ்வாயன்று காவல் துறையினரின் பலத்த பாதுகாப்போடு கோவை மாநகராட்சி அதிகாரிகள் அப்பகுதி யில் உள்ள வீடுகளுக்கான மின் இணைப் பைத் துண்டித்தனர். இதனால் ஆவேச மடைந்த அப்பகுதி மக்கள் அதிகாரிக ளின் நடவடிக்கையைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதைய டுத்து போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.