tamilnadu

img

சிறுமுகையில் முதலையை வேட்டையாடிவர் கைது

 வனத்துறையினர் விசாரணை

மேட்டுப்பாளையம்,பிப்.11- மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறு முகையில் பவானியாற்றின் நீர்த்தேக்கத் தில் இருந்த முதலையை வேட்டையாடி கொன்றவரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.  கோவை மாவட்டம், மேட்டுப்பாளை யம் அடுத்துள்ள சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட பவானியாற்றின் நீர்த்தேக்கத் தில் பிடிபட்ட முதலையை கொன்று அதன்  இறைச்சி மற்றும் தோலை சிலர் பதப்படுத்தி  வருவதாக சிறுமுகை வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைய டுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறை யினர் சிறிய முதலை ஒன்றினை கொன்று இருவர் கடத்தி செல்வதை கண்டனர்.  இதனைத்தொடர்ந்து, வனத்துறை யினர் இருவரையும் பிடிக்க முயன்றதில் ஒருவர் தப்பியோடிவிட்டார். இந்நிலை யில், பிடிபட்ட நபரிடம் நடத்திய விசாரணை யில் அவரது பெயர் பழனிசாமி (50) என்றும்,  தப்பியோடியவர் பெயர் மாரியப்பன் என்றும் தெரிய வந்தது. மேலும், தாங்கள் மீன் பிடிக்க விரித்த வலையில் குட்டி முதலையொன்று சிக்கி கொண்டதாகவும், அதனை கொன்று இறைச்சியை உண்டு விட்டு தோலை விற்கலாம் என திட்டமிட்ட தாக கூறியுள்ளார்.  இதனையடுத்து பழனிசாமியை கைது  செய்த வனத்துறையினர் அவரிடமிருந்த  முதலையின் உடல் பாகங்களை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய மாரியப் பனை தேடி வருகின்றனர். சிறுமுகை வனச்ச ரகதிற்கு உட்பட்ட பவானிசாகர் அணை யின் பின்புற நீர்த்தேக்கங்கள் மற்றும்  பவானியாற்றின் வனம் சார்ந்த கரையோ ரங்களில் முதலைகள் காணப்படுவதாகவும் இவற்றை சட்ட விரோதமாக வேட்டையாட முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்ப டும் என வனத்துறையினர் தெரிவிக்கின்ற னர்.