காகித கப்பல் விட்டு வாலிபர் சங்கம் நூதன போராட்டம்
கோவை, அக். 18 – கோவையில் பெய்த சிறு மழைக்கே சாலையெங்கும் வெள் ளக்காடாக காட்சியளிக்கும் நிலை யில், மாநகராட்சியின் நிர்வாக திறனின்மையை கண்டித்து மாந கராட்சி ஆணையருக்கு காகித கப்பல் விட்டு சேதி சொல்லும் நூதன போராட்டத்தில் வாலிபர் சங்கத்தினர் ஈடுபட்டனர். கோவை மாநகரிலுள்ள முக் கிய சாலைகளை பல்வேறு திட் டப்பணிகளுக்காக தோண்டப் பட்டுள்ளன. இதற்கான பணி கள் முடிந்த நிலையிலும் பல இடங்களில் அவை சரிவர செப் பனிடப்படாமல் உள்ளன. இத னால் மாநகரமெங்கும் சாலை கள் குண்டும், குழியுமாக காட்சி யளிக்கின்றன. பல சாலைகள் போக்குவரத்திற்கு முற்றிலும் பய னற்றதாகவே மாறியுள்ளது. இச் சூழலில் தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கி பரவலாக மழையும் பெய்து வருகின்றது. இதன்காரணமாக குண்டும், குழியுமான சாலைகளில் மழை நீரும் தேங்கி வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வரு கின்றனர். இந்நிலையில், சிறு மழைக்கே சாலையெங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நிலைக்கு தள் ளியுள்ள மாநகராட்சியின் நிர்வாக திறனின்மையை கண்டித்து கோவை சிவானந்தபுரம் பகுதியில் மாநகராட்சி ஆணையருக்கு காகித கப்பல் விட்டு சேதி சொல் லும் நூதன போராட்டத்தில் இந் திய ஜனநாயக வாலிபர் சங்கத் தினர் ஈடுபட்டனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டோர் கூறுகையில், சிவா னந்தபுரம் பகுதியில் சாலை யெங்கும் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இத னால் இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் படுகாயமடையும் சம்பவங்கள் அதிகரித்து வரு கின்றன. இதுதொடர்பாக மாந கராட்சி அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் எவ்வித நட வடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே, இப்பகுதியில் தரமான சாலை அமைத்திட நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தியே இந்த காகித கப்பல் விடும் போராட் டத்தை நடத்தியதாக தெரிவித் தனர்.
நூதன போராட்டங்கள் தொடரும்
இதற்கிடையே, குண்டும், குழி யுமான சாலைகளால் மழைக் காலத்தில் மக்கள் அவதிப்ப டுவது குறித்து எவ்வித நடவ டிக்கைகளையும் எடுக்காமல் கோவை மாநகராட்சி நிர்வாகம் செயலற்று இருப்பதற்கு வாலி பர் சங்கத்தின் கோவை மாவட் டக்குழு கடும் கண்டனம் தெரி வித்துள்ளது. மேலும், போர்க் கால அடிப்படையில் கோவை மாநகராட்சி சாலைகளை செப் பனிட வேண்டும். இல்லையேல், மாநகரம் முழுவதும் குண்டும், குழியுமான சாலைகளில் நூதன வடிவங்களில் போராட்டங்கள் நடத்த வாலிபர் சங்கம் சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் மாவட்டச் செய லாளர் கே.எஸ்.கனகராஜ் வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரி வித்துள்ளார்.