பொள்ளாச்சி, ஆக. 7 - பொள்ளாச்சி அடுத்த ஆழியார் குரங்கு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை யினர் தடைவிதித்துள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அருகே உள்ள குரங்கு அருவியில் கடந்த 3 மாதங்களுக்கு பின் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்தது. இதனை யடுத்து சுற்றுலா பயணிகள் அருவில் குளித்திட வனத்துறையினர் அனுமதி அளித்தனர். இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக குரங்கு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட் டுள்ளதால் புதன்கிழமை முதல் சுற்று லாப் பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொள்ளாச்சி வனத் துறை வனச்சரகர் காசிலிங்கம் கூறு கையில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வருகின்ற கன மழைக் காரணமாக பொள்ளாச்சி குரங்கு அருவியில் தண்ணீர் ஆர்ப் பரித்து கொட்டுகிறது. இதனால் அருவியில் கற்கள் மரக்கிளைகள் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி குரங்கு அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர் வரத்து சீரானதும் சுற்றுலா பயணிகள் அனு மதிக்கப்படுவர் என அவர் தெரி வித்தார்.