tamilnadu

தனியார் இடத்தில் அத்துமீறல் அதிமுக நிர்வாகி உட்பட 5 பேர் கைது

கோவை, மார்ச்.2- தனியார் இடத்தில் அத்துமீறி நுழைந்து வாக்குவா தத்தில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி உட்பட 5 பேரை போலீ சார் கைது செய்தனர். கோவை சிங்காநல்லூர் என்.ஆர்.என் லே அவுட்டை சேர்ந்தவர் தாமஸ் (55). இவர் அதே பகுதியில் இன்ஜி னியரிங் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவர் வங்கி மூலமாக ஏலம் விடப்பட்ட, வெள்ளலூர் பகுதியை சேர்ந்த  அதிமுக வட்ட தலைமை பிரதிநிதி கங்காதரன் (53) என்பவ ரின் 16 சென்ட் நிலத்தை 2007ம் ஆண்டு விலைக்கு வாங்கி இருந்தார்.  இந்நிலையில் அந்த இடத்தில் கம்பி வேலி  அமைக்க தாமஸ் சென்றார். அப்போது அங்கு அத்து மீறி நுழைந்த கங்காதரன் (53), அவரது மைத்து னர் பேச்சிமுத்து (55), மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த பசுபதியார் தமிழக முன்னேற்ற கழக நிறுவனர் சத்யா  பசுபதி (43), மூணாறு பகுதியை சேர்ந்த டிரைவர் ஜோதீஸ் (33), சிவகாசி பகுதியை சேர்ந்த தாமோதரன் (28) ஆகியோர் அந்த இடத்தில் அதிமுக கட்சிக் கொடியை நட்டி  வாக்குவாதம் செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து தாமஸ் போத்தனூர் காவல் நிலை யத்தில் புகார் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்  துறையினர் 5 பேரிடமும் விசாரணை மேற்கொண்ட னர். அப்போது சத்யா பசுபதி, இந்த நிலத்தை கங்காத ரன் எங்களுக்கு 99 வருடத்துக்கு குத்தகை அடிப்படையில் ஒப்படைத்துள்ளார். இந்த இடத்தில் நாங்கள் கட்சி கட்டடம் கட்ட போகிறோம் என கூறி வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது காவல் துறையினர், இந்த இடம்  யார் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதோ அவர்க ளுக்கு தான் சொந்தம் என கூறினர். இதை ஏற்க மறுத்த 5 பேரும் மீண்டும் போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். இதைத்தொடந்து போலீசார் சத்யா பசுபதி, கங்காதரன் உட்பட 5 பேரையும்  கைது செய்தனர். இவர்கள் மீது கொலை  மிரட்டல், தாக்குதல், அத்துமீறி நுழைதல் உள்பட 9 பிரிவு களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.