tamilnadu

img

இலவச இணைப்பில் மின் மீட்டர் பொருத்த வந்த அதிகாரிகளை விரட்டியடித்த விவசாயிகள்

அவிநாசி, செப். 10- அவிநாசி அருகே விவசாய தோட்டத்திலுள்ள இலவச மின் இணைப்பில் மீட்டர் பொருத்த வந்த அதிகாரிகளை செவ்வா யன்று விவசாயிகள் விரட்டிய டித்தனர். அவிநாசி வட்டம், வடுகபா ளையம் ஊராட்சிக்குட்பட்ட கிராமப்பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நில கடலை, கரும்பு, மக்காச்சோளம், வாழை, பருத்தி போன்ற பல்வேறு பயிற்களை விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் காட்டுவளவு கிராமத்தைச் சேர்ந்த சின்னச்சாமி என்பவருக்கு சொந்த மான கோவில் தோட் டத்தில் இலவச மின் சார இணைப்பில் மின் மீட்டர் பொருத்துவதற்கான முயற்சியில் மின்வாரிய அதிகாரி கள் ஈடுபட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த சின்னச்சாமி  அருகில் உள்ள விவசாயிக ளுக்கு இத்தகவலைத் தெரிவித் தார். இதனைத் தொடர்ந்து அங்கு திரண்ட 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் மீட்டர் பொருத்த  வந்த மின் அதிகாரியை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதனால் மீட்டர் பொருத்த வந்த மின்வாரிய அலுவலர் மின் மீட்டரைப் பொருத்தாமல் திரும்பிச்சென்றார். விவசாயிக ளும் கலைந்து சென்றனர்.  இதுகுறித்து  தமிழ்நாடு விவ சாய சங்க ஒன்றிய நிர்வாகி குமார சாமி கூறுகையில், 15நாட்க ளுக்குமுன்பு  இதேபோல போத்தம் பாளையத்தில்  இலவச மின் இணைப்பில் மின் மீட்டர் பொருத்துவதற்காக அதிகாரி கள் வந்தனர். அப்பொழுதே தடுத்து நிறுத்தி அவிநாசி மின் வாரிய அதிகாரிகளிடம்இலவச மின்இணைப்பில் மின் மீட்டர் அவிநாசி பகுதியில் பொருத்தக் கூடாதுஎன கோரிக்கை மனு அளித்தோம்.அப்போது பொருத்த மாட்டோம் என அதிகாரிகளும் உறுதியளித்தார். ஆனால் இன்று வடுகபாளையம் ஊராட்சியில் மின்மீட்டர் பொருத்தும் செய லில்மீண்டும் அதிகாரிகள் ஈடு பட்டுள்ளது கண்டனத்திற்குரிய செயலாகும்.  இதனைஎதிர்த்து வரும் நாட் களில் விவசாய சங்கங்கள்  கூட்ட மைப்பாக போராட்டம் நடத்தவி ருப்பதாக தெரிவித்தார்.