உடுமலை, அக். 23- உடுமலை மற்றும் மடத்துகுளம் பகுதி விவ சாயிகள் நல்ல தரமான உரம் மற்றும் பூச்சி மருந்துகள் முறையான விலையில் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த நான்கு வருடங்களாக கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது பருவ மழை பெய்து வருகிறது. இதனால் உடுமலை பகுதியில் உள்ளஅணைகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கும் குளம், குட்டைகள் நிரம்பி உள்ளன. ஆற்று பகுதி விவசா யிகள் நெல் மற்றும் கரும்பு விவசாயம் செய்துள்ளனர். மற்ற நிலப்பரப்பில் மக்காசோளம் விவசாயம் செய்து உள்ளனர். ஏற்கனவே பல தனியார் விதை நிறுவனங்களின் தரம் இல்லாத விதை மற்றும் உரங்களால், போதிய விளைச்சல் இல்லாமலும், விளை கிடைக்காமலும் பெரிய அளவில் நட்டம் ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது விதை மற்றும் உரம் உள்ளிட்ட பொருள்களை தரமாகவும், நியாயமான விலையிலும் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். இது குறித்து விவசாயிகள் கூறும் போது, கடந்த காலங்க ளில் தரமான விதை உரம் குறித்து அறியாமல் பெரிய நஷ்டம் ஏற்பட்ட நிலையில், எங்களுக்கு பயிர் காப் பீடு உள்ளிட்ட எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. இந்நிலையில் தற்போது விவசாயம் செய்ய தரமான விதை, உரம் உள்ளிட்டவை நியாயமான விலையில், தட்டுப்பாடின்றி கிடைக்க அரசு மற்றும் வேளாண் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.