பொள்ளாச்சி, ஜூன். 17- கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கடவு அரசாம்பாளையம் கிராமத்தில் கிழக்கு தோட்டம் பகுதியில் எம்.சாண்ட் தொழிற்சாலை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், விவசாய நிலங்களில் எம்.சாண்ட் சிமெண்ட் தொழிற்சாலை அமைந்தால், விவசாய நிலங்கள் பாதிக்கப்படும்.
ஆடு, மாடுகள் மேய்ச்சல் தடைபடும். தென்னை மரங்கள் பெரு மளவில் பாதிப்பை எதிர்கொள்ளும். இதேபோல் தொழிற் சாலையிலிருந்து வெளியேறுகின்ற தூசிகள் தென்னை மற்றும் பயிர்கள் மீது படரும்போது ஒளிசேர்க்கை வெகு வாக பாதிப்பிற்குள்ளாகும். மேலும், எந்தவித முன்னறிவிப்புமின்றி வெடி வைக் கின்றனர். இதனால் கால்நடைகள் மிரண்டு போகிறது.
தொழிலாளர்கள் மீதும் வெடியில் சிதறிய கற்கள் விழுகின்றன. எனவே இப்பகுதியில் விவசாயிகள் நலன் கருதியும், விளைநிலங்கள் கருதியும் எம்.சாண்ட் தொழிற்சாலை அமைக்காமல் தடுத்திட அரசு உரிய வேண் டும். என விவசாயிகள் தெரிவித்தனர்.