tamilnadu

செங்காந்தள் பயிரை அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் சேர்க்க தமிழக முதல்வரிடம் விவசாயிகள் நேரில் கோரிக்கை

திருப்பூர், பிப். 7 – தமிழகத்தில் கடந்த 35 ஆண்டு காலமாக பயிர் செய்யப்பட்டு வரும் செங்காந்தள் பயிரை அங்கீ கரிக்கப்பட்ட பயிர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று தமிழ் நாடு கண்வலி விதை எனப்படும் செங்காந்தள் பயிர் விவசாயிகள் சங்கத்தினர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நேரில் கோரிக்கை விடுத்துள்ளனர். வியாழனன்று மாலை தமிழ் நாடு செங்காந்தள் பயிர் விவசாயி கள் சங்கத்தின் ஒருங்கிணைப்புக் குழுவினர் தமிழக முதல்வர் எடப் பாடி பழனிசாமியை சென்னை யில் உள்ள அவரது வீட்டில் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித் துள்ளனர். இதில் தமிழகத்தில் திருப்பூர், கரூர், திண்டுக்கல் உள்பட சில மாவட்டங்களில் கண்வலி விதை உற்பத்தி செய்யப்படுகிறது. அரி தினும் அரிதான கண்வலி விதை மருந்து உற்பத்திக்குப் பயன்படுகி றது. எனவே உற்பத்தி நிறுவ னங்கள் நல்ல விலை கொடுக்கத் தயாராக இருந்தாலும் இடைத்தர கர்கள் கண்வலி விதை விவசாயி கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தி விலையைக் குறைத்து கொள் முதல் செய்கின்றனர். கடந்த ஆறு ஆண்டுகளாக விவ சாயிகள் கண்வலி விதைக்கு விலை நிர்ணயிக்க சங்கத்தின் மூலம் தொடர் முயற்சி செய்யப் பட்டு வருகிறது. இந்நிலையில் கண்வலி விதைக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிலோ ரூ. 2000 என நிர்ணயிக்கவும், ஆண்டுதோ றும் அரசு அதிகாரிகள், விதை வாங்கும் நிறுவனங்கள், விவசாயி கள் அடங்கிய முத்தரப்பு கூட்டம் மூலமாக விலை நிர்ணயம் செய்து விவசாயிகளுக்கு கட்டுபடியாகும் விலை கிடைக்க ஏற்பாடுகளை செய்யவும் சங்கம் முயற்சித்து வரு கிறது. இதை உறுதிப்படுத்த முதல்வரிடம் கோரிக்கை வைக் கப்பட்டது. செங்காந்தள் விதை விவசாயி களின் கோரிக்கைகளை வெற்றிய டைய அனைத்துக் கட்சி, அமைப் புகளின் தலைவர்கள், பாராளு மன்றப் பிரதிநிதிகளை சந்திக் கவும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட் டோரை சந்தித்திக்கவும் தீர்மா னித்து உள்ளதாகவும் தமிழ்நாடு செங்காந்தள் பயிர் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பழ.இரகுபதி தெரிவித்துள்ளார்.