tamilnadu

img

எல்லப்புடையம்பட்டியில் உள்ள தடுப்பணையை தூர்வார விவசாயிகள் வலியுறுத்தல்

தருமபுரி, ஜூலை 7- எல்லப்புடையாம்பட்டியில் தடுப் பணையை தூர்வாரி விவசாய பாச னத்தை மேம்படுத்த வேண்டும் என விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், சித்தேரி மலைத்தொடரில் இருந்து அரூர் நோக்கி வரும் வரட்டாற்றின் குறுக்கே எல்லப்புடையாம்பட்டியில் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பணையில் உள்ள கால் வாய் வழியாக கம்மாளம்பட்டி, முத் தானூர், புறறாக்கல் உட்டை, மாவேரிப்பட்டி, சங்கிலிவாடி, செல்லம்பட்டி, எல்லப்புடையாம் பட்டி உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராமங்களிலுள்ள ஏரிகள், குளம் குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலை களுக்கு மழை நீர் செல்கிறது. இத னால் இந்தப் பகுதியிலுள்ள கிரா மங்களுக்குத் தேவையான குடிநீர் வசதியும், சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதியை யும் பெறுகிறுது. இந்நிலையில், வரட்டாற்றின் குறுக்கேயுள்ள இந்த தடுப்பணை யானது 44 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகும். தற்போது தடுப் பணையில் அதிகளவில் மண் மற்றும் மணல் மேடுகள் உள்ளன. இதனால் தடுப்பணையில் நீர் தேங்கும் பகுதி பாதியாக குறைந்துவிட்டது. எனவே, பருவ மழைக்காலம் தொடங்கும் முன்பே தடுப் பணையைத் தூர்வார வேண்டும்.  மேலும், தடுப்பணையில் பொருத்தப் பட்டுள்ள இரும்புக் கதவுகள் சேத மடைந்துள்ளன. இதனால் மழைக் காலங்களில் எல்லப்புடையாம்பட்டி வேடியப்பன் கோயில் ஏரிக்கு செல் லும் கால்வாய் வழியாக குறைந் தளவில் தண்ணீர் செல்கிறது. எனவே, பொதுப்பணித் துறையி னர் தடுப்பணையில் உள்ள அனைத்து இரும்புக் கதவுகளையும் சீரமைக்க வேண்டும். இதேபோல், தண்ணீர் செல்லும் கால்வாய்களை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களை பயன்படுத்தி தூய்மை செய்ய வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மாவட்ட நிர் வாகத்தை வலியுறுத்தியுள்ளனர்.