மே.பாளையம், ஆக. 2- மேட்டுப்பாளையத்தில் கத்திரிக்காய் பயிரிட்ட விவசா யிகள் கொரோனா முடக்கத் தால் சரியான விலை கிடைக் காமல் ஏமாற்றம் அடைந்துள்ள னர். கோவை மாவட்டம், மேட் டுப்பாளையத்தில் உள்ள மலையடிவார கிராமங்களில் வாழை பயிரிட்டு வந்த விவ சாயிகள் காட்டு யானைகளின் ஊடுருவல் காரணமாக தற்போது வாழைக்கு பதில் காய்கறி பயிரிட்டு வருகின்றனர். குறிப் பாக யானைகளை ஈர்க்காத கத்திரிக்காயை பெருமளவுபயிரிட்டுள்ளனர். இப்பகுதியில் முன்கூட்டியே பெய்த கோடை மழை மற் றும் தற்போது பெய்து வரும் சாரல் மழை ஆகியவை கத்திரி சாகுபடிக்கு பெரிதும் உதவின. இதனால் விளைச்சல் அதிகரித்தது. ஆனால் கொரோனா கால முடக்கம் தொடர் வதால் கத்திரிக்கான விலை கிடைக்க வில்லை. பெரும்பாலான உணவு விடுதி கள் செயல்படாமல் இருப்பது, திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வெகுவாக குறைந் துள்ளதால், காய்களை விற்பனைக்காக பிற பகுதிகளுக்கு கொண்டு செல்வதில் உள்ள போக்குவரத்து தடைகள் போன் றவை கத்திரி விவசாயிகளை கடுமையாக பாதித்துள்ளது. இந்நிலையில், உள்ளூர் தேவைகளுக் காக மட்டுமே குறைந்தளவு தேவை இருப்ப தால் கத்திரிக்காய்கள் தேக்கமடைந்து அதன் விலை வெகுவாக சரிந்துள்ளது. இருபது கிலோ கொண்ட ஒரு துண்டு கத்திரிக்காய் ரூபாய் நானூறு முதல் ஐநூறு ரூபாய் வரை விலை போன நிலையில் தற்போது நூற்றைம் பது முதல் இருநூறு ரூபாய் அளவிற்கே விலை போகிறது. இதனால் கொள்முதல் செய்த அளவிற்கு கூட பணம் கிடைக்காமல் கத்திரி விவசாயிகள் கலக்கத்தில் ஆழ்ந்துள் ளனர்.