tamilnadu

img

வடமாநிலங்களுக்கு கூடுதல் ரயில் இயக்கிடுக

சிஐடியு தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி புலம்பெயர்ந்தோர் ஆர்ப்பாட்டம்

கோவை, மே 20 -  உணவு, இருப்பிடமின்றி தவிக் கும் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பிட கூடுதல் ரயில்களை இயக்கிட வலியுறுத்தி கோவை யில் சிஐடியு தலைமையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கருப்பு கொடியேந்தி கவன ஈர்ப்பு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டத்தில் லட்சத் திற்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வரு கின்றனர். இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரண மாக கட்டிடம், தையல், தங்கநகை மற்றும் பாணிபூரி விற்பனை உள் ளிட்ட பணிகளில் ஈடுபட்ட தொழி லாளர்கள் வேலையின்றி கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்ற னர். வருவாய் இல்லாததால் வாட கையில் குடியிருக்கும் வீட்டை யும் காலி செய்ய வீட்டின் உரிமை யாளர்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

இதன்காரணமாக தொண்டு நிறுவனங்கள் கொடுக் கும் உணவுகளை உண்டும், சாலை யில் படுத்துறங்கியும் நாட்களை நகர்த்தி வருகின்றனர். இத காரணமாக தங்களின் சொந்த  ஊருக்கு செல்ல வேண்டும் என்கிற நிர்பந்தம் இத்தொழிலாளர் களுக்கு ஏற்பட்டுள்ளது.  இதனையடுத்து பல்வேறு நிர்பந்தங்களுக்கிடையே தமிழக  அரசு  மூன்றாவது கட்ட ஊரடங்கு முடிந்த நிலையில்  சிறப்பு ரயில் களை ஏற்பாடு செய்து வடமாநிலத் திற்கு அனுப்பி வருகின்றனர். ஆனால்,  கோவையில் இத்தொழி லாளர்கள் இருக்கிற எண்ணிக் கைக்கும் ஏற்பாடு செய்யப்பட் டுள்ள ரயில்களின் எண்ணிக் கையும் போதுமானதாக இல்லை.  இதனால் புலம்பெயர்ந்த தொழி லாளர்கள் நடந்தே ஊருக்கு செல்ல முயல்கின்றனர். அப்போது விபத் துகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. ஆகவே தமிழக அரசு கூடுதலான ரயில் சேவையை  வழங்க வலியுறுத்தி செவ்வா யன்று கோவையில் சிஐடியு தலைமையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. 

காந்திபுரத்திலுள்ள  மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத் திற்கு சிஐடியு மாவட்ட தலைவர் சி.பத்மநாபன் தலைமை தாங் கினார். புலம்பெயர்ந்த தொழி லாளர்களின் கோரிக்கை களை வலியுறுத்தி சிஐடியு மாவட்ட செயலாளர் உரையாற்றி னார். முன்னதாக, இந்த ஆர்ப்பாட் டத்தில் சிபிஎம் மாவட்ட செயலா ளர் வி.இராமமூர்த்தி, செயற் குழு உறுப்பினர்கள் கே.மனோ கரன், என்.ஜெயபாலன், கே.அஜய்குமார், கே.எஸ்.கனக ராஜ் மற்றும் சிஐடியு மாநிலகுழு உறுப்பினர் ஆறுமுகம்  உள்ளிட் டோருடன் ஐம்பதுக்கும் மேற் பட்ட வடமாநில தொழிலாளர்கள் பங்கேற்று கோரிக்கை முழக்கங் களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த சந்திப் என்ற தொழிலாளி கூறுகையில், நான் கோவை  ஆவராம்பாளையம் பகுதியில் வாடகை வீட்டில்  வசித்து பெயின்டிங் வேலை  பார்த்து வந்தேன். தற்போது ஊரடங்கு காரணமாக இரண்டு மாதங்களுக்கு மேலாக வரு வாய் இல்லை.

எங்களுக்கு வேலை  கொடுத்தவர் போனை எடுக்க  மறுக்கிறார். அவர் எங்கு இருக் கிறார் என்றே தெரியவில்லை. வீட்டு உரிமையாளர் வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கிறார். எங்களுக்கு வேறு வழியின்றி, தற் போது காந்திபுரம் பாலத்திற்கு அடியில் படுத்து உறங்குகிறோம். உணவு இல்லை, வேலை இல்லை, இருப்பிடம் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வருகிறோம். உட னடியாக அரசு எங்களை ஊருக்கு அனுப்ப வேண்டும். எங்களின் உத்தரபிரதேச மாநில அரசு எங் களின் நிலையை உணர்ந்து உடன டியாக எங்களை ஊருக்கு வர வழைக்க போதிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றார்.  இதேபோன்று புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் கோரிக் கையை வலியுறுத்தி சிஐடியு சார் பில் ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங் களில் கருப்பு கொடியேந்தி சிஐடியு வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.