tamilnadu

அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் வெடிவிபத்து 5 தொழிலாளர்கள் படுகாயம்

கோவை, ஜூன் 29- அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 தொழிலாளர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம், அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் ராணுவத்திற்குத் தேவையான சிறிய ஆயுதங்கள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு 1,600 க்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் வெள்ளியன்று நள்ளிரவில் இத்தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 5 தொழிலாளர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இத்தொழிற்சாலையில் கடந்த 2015, 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரியில் விபத்துகள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.