40 ஆண்டு கோரிக்கை புளியங்கோம்பை பகுதியில் தடுப்பணை கட்டக்கோரி விவசாயிகள் மனு
ஈரோடு, ஆக. 5 - சத்தியமங்கலம் அருகே மழைக்காலத்தில் வீணாகும் தண்ணீரை சேமிக்க தடுப்பணை கட்ட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். சத்தியமங்கலம் அடுத்துள்ள குத்தியாலத்தூர் ஊராட்சி கம்பத்தராயன் மலைப்பகுதியில் பெய்யும் மழை நீரா னது, சூரிப்பள்ளம் வழியாக பவானி ஆற்றில் கலந்து வீணாகி வருகின்றது. இதைத் தடுக்கும் வகையில் புளி யங்கோம்பை பகுதியில் தடுப்பணை கட்ட வேண்டும் என்று கடந்த 40 ஆண்டுகளாக விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக 3 முறை ஆய்வு நடத்தி யும் திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி யும் திட்டம் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் புளியம்கோம்பை, ஒட்ட குட்டை, பாசக்குட்டை, கம்பத்திராயன்மலை, கொண்டையம் பாளையம், பளிஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 2ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்பெற வாய்ப்பு உள்ளதால், மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தடுப்பணை கட்டும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து திங்களன்று விவசாயிகள் ஆட்சியர் அலு வலகத்தில் மனு அளித்து கூறுகையில், அணை கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்திற்கு அருகில் தனியாருக் குச் சொந்தமான இடம் உள்ளதால் நிலத்தைக் கையகப் படுத்த வருவாய்துறையினர் முன்வராமல் உள்ளனர். 3 முறை திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசின் கவ னத்திற்கு அனுப்பி வைத்த பிறகும் திட்டம் நடைமுறைக்கு வரவில்லை. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயிகள் மட்டுமல்லாது வன விலங்குகளின் தண்ணீர் தாகத்தையும் தீர்க்கும். இதனால் வனவிலங்குகள் தண்ணீர் தேடி விளைநிலங்களுக்கு வருவது கட்டுப்படுத்தப்படும். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.
ஏரியை தூர்வார கோரி மனு
தருமபுரி, ஆக.5- ரெட்டிகுட்டை ஏரியை தூர்வாரக் கோரி கேத்து ரெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தரும புரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழியிடம் மனு அளித் தனர். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கேத்து ரெட்டிப் பட்டி கிராம பகுதியில் 350 க்கும் மேற்பட்ட விவ சாயிகள் ரெட்டிகுட்டை ஏரியை நம்பி விவசாயம் செய்து வருகின்றனர். ஆகவே, ரெட்டிகுட்டை ஏரியை கரை உயர்த்தியும், அதனை இயந்திரங்களை கொண்டு தூர்வாரி ஏரியை சீரமைத்து தர வேண்டும் என பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவல ரிடம் அப்பகுதி பொதுமக் கள் சார்பில் மனு அளித்த னர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்நிலையில், இக்கோரிக்கைகள் தொடர் பாக திங்களன்று அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழியை சந்தித்து மனு அளித்தனர்.
புதியதாக டாஸ்மாக் கடை திறக்க கூடாது கிராம மக்கள் கடும் எதிர்ப்பு
ஈரோடு, ஆக. 5 - புதியதாக டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மொடக்குறிச்சி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று மனு அளித்தனர். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அடுத்துள்ள 46புதூர் ஊராட்சிக்குட்பட்ட ஆணைக்கல்பாளையத்தில் 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும் ஆணைக்கல்பாளையத்தை சுற்றிலும் எல்ஐசி காலனி, தாமரைநகர், மாவட்ட ஆயுதப்படை வளாகம், காவலர் குடி யிருப்பு உள்ளிட்டவைகள் உள்ளன. இந்நிலையில், ஆணைக்கல்பாளையம் சுற்றுச்சாலையில் புதியதாக மதுக்கடை அமைப்பதற்கான நடவடிக்கைளை மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் மேற்கொண்டு வருவதாக கூறப்படு கின்றது. கடை திறக்கப்பட்டால் பொதுமக்கள் கடுமை யாகப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தற்போது புதியதாக கடை திறக்க முடிவு செய்யப் பட்டுள்ள இடத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் ஏற்கனவே ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வரும் நிலை யில் புதியதாக எதற்கு கடை திறக்க வேண்டும் என வலியு றுத்தி ஈரோடு ஆட்சியர் கதிரவனிடம் மனு அளித்துள்ளனர்.