சேலத்தில் பரவும் டெங்கு காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுத்திடுக
மாவட்ட ஆட்சியரிடம் சிபிஎம் மனு
சேலம், அக்.8- சேலம் மாவட்டத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை தடுத்திடவும், நோய் பாதித்தவர் களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் கிடைத்திடவும் போர்க் கால அடிப்படையில் நடவ டிக்கைக் எடுக்கக்கோரி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக் கப்பட்டது. இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி தலைமையில், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் ஆர்.வெங்கட பதி, எம்.குணசேகரன், சிஐடியு போக்குவரத்து ஊழியர் சங்க பொதுச்செயலாளர் கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது; சேலம் மாவட்டத்தில் சுமார் 38 லட்சத் திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மாவட்டத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவம் மற்றும் சுகாதார வசதி போது மானதாக இல்லை. குறிப்பாக, சேலம் மாநகராட்சி உள்ளிட்டு மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டு மூடாமல் இருப்பது, முறையான சாலை மற்றும் சாக்கடைகள் இல் லாததால் மழைக்காலங்களில் கழிவு நீர் ஆங்காங்கே குட்டைகள் போல் தேங்கி நிற்கின்றது. இது மட்டுமல்லாமல் சிறு, பெரு நிறுவ னங்கள் நீரோடைகளை ஆக்கிர மித்து உள்ளதாலும் கழிவு நீர் செல்ல வழியின்றி தேங்கி கிடக் கின்றன. இதனால் பல வகையான நோய்கள் பரவி ஏழை, எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வரு கின்றனர். மேலும் நோயின் தன்மை குறித்து தெரியாமலேயே சிலர் உயிரிழந்து வரும் நிலையும் ஏற் பட்டு வருகிறது. இதேபோல், உள்ளாட்சி, பேரூ ராட்சி, நகராட்சி, மாநகராட்சி பணி யாளர்களை தேவைக்கேற்ப அரசு நியமிக்காததால் கழிவுகளை அப் புறப்படுத்த முடியாமல் சுகாதார சீர் கேடுகள் ஏற்படுகிறது. கழிவு களும், கழிவு நீரும் தேங்குவதால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தி யாகுகிறது. முன்பெல்லாம் கொசு ஒழிப்பு மருந்து உள்ளிட்ட நோய் தடுக்கும் மருந்துகள் தெளித்து வந்ததும் தற்போது நிறுத்தப்பட் டுள்ளது. இச்சூழலில் தற்போது ஏற்பட்டுள்ள பருவ நிலை மாற்றம் காரணமாக டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் பெருமளவில் சேலம் அரசு மருத்துவ மனையிலும், தனியார் மருத்துவ மனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆகவே, நோயின் தீவிரத்தை அறிந்து மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை வேகப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. நோய் தடுப்பு பிரச் சாரத்தை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். கிராம ஊராட்சிகள், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூ ராட்சிகளின் அனைத்து வார்டு களிலும் தீவிர கண்காணிப்பு மேற் கொண்டு நோய் பாதித்தவர்களை உடனே அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து உரிய சிகிச்சை அளிக்க உதவியாக 24 மணி நேரமும் வாகன வசதிகளுடனான தயாரிப்பு களை செய்திட வேண்டும். அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் மருத்துவர்கள், மருந்துகள், வார்டில் படுக்கைகள் உள்ளிட்டவைகள் தேவையான அளவிற்கு இருக்கின்ற வகையில் பராமரித்திட வேண்டும். தேவை யான துப்புரவு பணியாளர்களை நியமித்து சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும். இப்பணி களை மாவட்ட நிர்வாகம் போர்க் கால அடிப்படையில் மேற் கொண்டு, நோயிலிருந்து மக்களை பாதுகாக்க நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என அம்மனு வில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வேப்பாடி ஆற்றில் தடுப்பணை அமைத்திடுக
விவசாயிகள் வலியுறுத்தல்
தருமபுரி, அக்.8- வேப்பாடி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைத்து நீராதாரத்தை மேம்படுத்த வேண்டும் என விவசாயிகள்,பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் வேப்பாடி ஆறு உள்ளது. இந்த ஆறு சேலம் மாவட்டம் சேர்வராயன் மலை அடிவாரத்தில் உற்பத்தியாகிறது. இந்த ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதின் மூலம் பி.துரிஞ்சிப்பட்டி, கோட்டமேடு, சாலைவலசு, பொம்மிடி, நடூர் ஆகிய பகுதிகளில் விவசாய பாசனத்திற்கும் இப் பகுதிகளில் குடிநீருக்கு நீராதாரம் மேம்படும். எனவே, நிலத்தடி நீரை மேம்படுத்த வேப்பாடி ஆற்றில் தடுப்பணை கட்டவேண்டும் என அப்பகுதி விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அரூரில் புதிய நூலக கட்டிடம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
தருமபுரி, அக். 8- அரூரில் பாழடைந்து பயனற்றுக் கிடக்கும் நூலக கட்டிடத்தை அகற்றி புதிய நூலக கட்டிடம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியு றுத்தியுள்ளனர். தருமபுரிமாவட்டம், அரூர் நகரத்தில் 1990ஆம் ஆண்டு அரூர் பகுதி மக்களின் நலன் கருதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய மாநிலங்களவை உறுப்பினரான மறைந்த ஏ.நல்ல சிவன் ரூ.5 லட்சம்நிதி நிதி ஓதுக்கீடு செய்தார். இந்த நிதியின் மூலம் புதிய நூலகக் கட்டிடம் கட்டப்பட்டது. அறிவு பெட்டகமான இந்த நூலகத்தை அரூர் பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்த நூலக கட்டிடம்பாழ டைந்த நிலையில் உள்ளதால், வாடகை கட்டிடத்தில் நூலகம் இயங்கி வருகிறது. எனவே பாழடைந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய நூலக கட்டிடம் கட்டு வதற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென அரூர் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரூர் ராஜகால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வார வலியுறுத்தல்
தருமபுரி, அக். 8- அரூர் பெரிய ஏரி முதல் வானியாறு வரை உள்ள ராஜகால்வாய் ஆக்கிர மிப்புகளை அகற்றி நீராதாரத்தை மேம் படுத்தவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், அரூர் அருகே பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் இருந்து சுமார் 2 கிமீ தூரம் கடந்து வாணியாறு வரை இணைக்கும் ராஜகால்வாய் அமைக் கப்பட்டுள்ளது. மழை காலங்களில் இந்த கால்வாய் மூலம் அரூர் நகருக்கு நீரா தாரம் பெறுகிறது. மேலும் குடிநீர் பிரச்ச னையை தீர்க்கிறது. இந்நிலையில் ராஜ கால்வாய் ஆங்காங்கே தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். தற்போது இக்கால்வாயில் புதர் மண்டி தண்ணீர் செல்வதற்கு தடை ஏற்பட்டுள்ளது. இத னால் அரூர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. எனவே ராஜகால்வாயில் உள்ள ஆக் கிரமிப்புகளை அகற்றவேண்டும். மேலும் கால்வாயில் உள்ள முட்புதர்களை அகற்றி தூர்வார்வாரி நீராதாரத்தை மேம் படுத்த வேண்டும் என அரூர் பேரூராட்சி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அணையிலிருந்து வெளியேறும் உபரிநீரை ஏரிகளில் நிரப்பும் திட்டம்
காற்றில் பறந்த முதல்வரின் வாக்குறுதி
தருமபுரி, அக்.8- ஈச்சம்பாடி அணையிலிருந்து வெளி யேறும் உபரிநீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை தமிழக அரசு நிறைவேற் றாமல் உள்ளதாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஈச்சம்பாடி அணையி லிருந்து வெளியேறும் உபரிநீரை 66 ஏரிகளுக்கு நிரப்பும் திட்டத்தின் மூலம் பாசனத்திற்கு தண்ணீரும், கால்நடை களுக்கு குடிநீரும் கிடைக்கும். ஈச்சம்பாடி அணையின் கொள்ளளவு 37 மி. கன அடி ஆகும். இதன்மூலம் 6,250 ஏக்கர் நன்செய் நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்த அணையின் வலது மற்றும் இடது புற கால்வாய் வழியாக தலா 35 கன அடி வீதம் 120 நாட்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. அணையி லிருந்து வெளியேறும் உபரிநீரை குழாய்கள் மூலம் கொண்டு செல்வதால் 20 சதவிகித தண்ணீரை சேமிக்க முடியும். இதனால் குறுகிய காலத்தில் 66 ஏரி களுக்கும் நீர் நிரப்ப வாய்ப்பு உள்ளது. இதனால் நீர்மட்டம் உயர்ந்து மக்களின் குடிநீர் தேவையும், கால்நடைகளுக்கு தேவையான குடிநீரை பூர்த்தி செய்ய முடியும். மேலும் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைப்பதால் விவசாயிகளின் வாழ்வா தாரம் மேம்படும். எனவே ஏரிகளுக்கு நீரை நிரப்பும் திட்டத்தை நிறைவேற்ற விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால் தமிழக அரசு இதுநாள் வரை நிறைவேற்றவில்லை. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மொரப்பூர் ஒன்றியச் செயலாளர் கே.தங்கராஜ் கூறுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடை பெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதாக தமிழக முதல்வர் பேசினார். சமீபத்தில் நடந்த அரூர், பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போதும் தமிழக முதல்வர், ஏரி நீர் நிரப்பும் திட்டத்தை நிறைவேற்றுவதாக வாக்கு றுதியளித்தார். ஆனால் இதுவரை இத் திட்டம் நிறைவேற்றப்படவில்லை. எனவே அணையிலிருந்து வெளியேறும் உபரி நீரை வீணாகாமல், ஏரிகளில் நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.