tamilnadu

ஈரோடு முக்கிய செய்திகள்

ஜனநாயக அமைப்புகளின் இயக்கங்களுக்கு தொடர் அனுமதி மறுப்பு எஸ்.பி.யை இடமாற்றம் செய்ய கோரிக்கை

ஈரோடு, டிச. 3- முற்போக்கு, ஜனநாயக அமைப்புக ளுக்கு தொடர்ந்து அனுமதி மறுத்து வரும் ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர் சக்திகணேசனை இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளை யம் நடூர் பகுதியில் 20 அடி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியாகியுள்ளனர். இச்சம்பவத்திற்கு காரணமாக வீட்டின் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மேட்டுப்பாளையம் மற்றும் கோவையில் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது காவல் துறையினர் கொடூர தாக்குதலை நடத்தி கைது செய்துள்ளனர்.  இந்த சம்பவத்தை கண்டித்தும்,  உயிரி ழந்தவர்களுக்கு நீதி கேட்டும் முற்போக்கு அமைப்புகள் சார்பில் ஈரோட்டில் ஆர்ப் பாட்டம் நடத்த அனுமதிகோரி தீண்டாமை  ஒழிப்பு முன்னணியின் தாலுகா செயலா ளர் சொங்கப்பன், தலைவர் என்.பழனிசாமி,  சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாவட்ட  பொருளாளர் நடராஜன், தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சீ.விசுவநா தன், மாவட்ட நிர்வாகிகள் அழகர்சாமி,  தம்பி, அருணாச்சலம் ஆகியோர் செவ்வா யன்று ஈரோடு மாவட்ட காவல்துறை  கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர். ஆனால், இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதியளிக்க மறுப்பு  தெரிவித்துள்ளது. இதைதொடர்ந்து மனு அளிக்க வந்தவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஈரோடு மாவட்ட காவல்துறை தொடர்ந்து முற்போக்கான ஜனநாயக அமைப்புகளின் போராட்டங்களுக்கும், ஆர்ப்பாட்டங்களுக்கும் அனுமதி மறுத்து வருகிறது. இதனை வன்மையாக கண் டிக்கின்றோம். மேலும், இதனை கண்டித் தும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரை இடமாற்றம் செய்யக்கோரியும் மிகப்பெரிய அளவில் போராட்டத்தை நடத்த உள்ள தாக தெரிவித்தனர்.

5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்ய மாணவர் சங்கம் வலியுறுத்தல்

ஈரோடு, டிச. 3- 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு நடத்தப்படவுள்ள பொதுதேர்வை ரத்து செய்ய கோரி இந்திய மாணவர்  சங்கத்தினர் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் ஈரோடு மாவட்ட தலைவர் எம்.வினிஷா, மாவட்ட துணைத் தலைவர் நவீன்,  மாவட்ட குழு உறுப்பினர் சரவணன், திவாகர் உள்ளிட்டோர் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, புதிய கல்விக் கொள்கை 2019 அறிக்கை ஏற்புடையதல்ல என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் தொடர்ந்து பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது. குறிப்பாக, புதிய கல்விக் கொள்கை யில் மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு போன்ற வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்றும், 9 முதல்  12 ஆம் வகுப்புகளுக்கு எட்டு பருவத் தேர்வு என கூறப் பட்டுள்ளது. இதற்கு கல்வியாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  இந்நிலையில் தமிழக அரசானது 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என அறிவித்துள்ளது. இது மாணவர்களை மனரீதியாக பாதிக்கு கூடிய ஒன்றாகும். ஆகவே இதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மேலும் ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளை கண்காணிக்க, உயர் நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் களுக்கு வழங்கியுள்ள அரசாணை எண் 145 மற்றும் 202 ஐ தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என அம்மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.