திருப்பூர், செப். 22 – பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடு முறையை முன்னிட்டு பொங்கலூர் ஒன்றியம், அலகுமலை கிராமத்தில் மாணவர்களுக்கான ஆங்கில மொழி பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது. ஞாயிறன்று அலகுமலை கிராமத்தில், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச் செயலாளரும், அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்புப் பயிற்சி மையத்தின் மாநிலத் துணை ஒருங்கிணைப்பாளருமான கணேஷ் பங்கேற்று மொழிப் பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார். அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் சுமார் 30 பேர் பங்கேற்றனர். இவ்வகுப்பு வாரத்தில் 3 நாட்கள் நடத்தப்படும் என்று இந்த வகுப்பு பயிற்சியாளர்கள் தெரிவித்தனர்.