tamilnadu

img

பல்லடம் பகுதியில் ஆபத்தான சாலையைச் செப்பனிட வலியுறுத்தல்

திருப்பூர், நவ. 28 – திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகரில் அரசு மருத்துவமனை முதல் செட்டிபாளையம் பிரிவு வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் சாலையைச் செப்பனிடுமாறு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு பல்லடம் ஒன்றியக்குழு சார்பில் ஒன்றியச் செயலாளர் ஆர்.பர மசிவம் வியாழக்கிழமை அனுப்பி யுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:  கோவை – திருச்சி தேசிய நெடுஞ் சாலையில் ஆயிரக்கணக்கான வாக னங்கள் தினமும் சென்று வருகின் றன. இதில் பல்லடம் நகரில் செட்டி பாளையம் பிரிவு முதல் அரசு மருத் துவமனை வரை சாலையோரத்தில் சுமார் 2 அடிக்கும் மேலாக பள்ளங்கள், குண்டும், குழியுமாக உள்ளன.  இதனால் கனரக வாகனங்கள் செல்லும்போது, இடது பக்க ஓரத் தில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஒதுங்க முடியாமல் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துகள் ஏற்படு வது தொடர்ந்து நடைபெற்று வரு கிறது. இப்பகுதியில் வங்கிகள், காவல் நிலையம், அரசு மருத்துவ மனை உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு வரும் மக்கள் பழுதடைந்த சாலை யில் சென்று வர மிகவும் அவதிப்படு கின்றனர். எனவே தேசிய நெடுஞ் சாலை ஓரத்தில் மண் கொட்டி சரி செய்திட நெடுஞ்சாலைத் துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்.பரமசிவம் கேட்டுக் கொண்டுள்ளார்.