tamilnadu

img

தடாகம் ஊராட்சி கிராமசபை கூட்டத்தை உடனே நடத்துக

கோவை, ஆக. 6 –  கோவை தடாகம் கிராமசபை கூட் டத்தை கூட்ட வலியுறுத்தி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் செவ் வாயன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.   கோவை பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், சின்னதடாகம் ஊராட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக கிராமசபை கூட்டத்தில் பொதுமக்களின் அடிப்படை வசதிகள் குறித்து வலியுறுத்தியதின் பேரில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. ஆனால் இந்த தீர்மானங்கள் எதுவும் இதுவரை நிறைவேற்றப்பட வில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால் அலட்சியப்படுத்தும் வகையில் பதிலளிக்கிறார்கள். இதனையடுத்து கடந்த முறை நடைபெற்ற கிராமசபை கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.  ஆகவே மக்களுக்கு நம்பிக்கை ஏற் படும் வகையில் தடாகம் ஊராட்சியின் கிராமசபை கூட்டத்தை நடத்தி, அதில் நிறை வேற்றப்படும் தீர்மானங்களை நடை முறைப்படுத்த வேண்டும். இதற்கு மாவட்ட ஆட்சியர் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர். இந்த மனுவினை திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர்  சி.எம்.கே.கிருஷ்ணகுமார், மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.கேசவமணி மற்றும் வே.சூரியன்தம்பி, ஆர்.பழனிச்சாமி, செல் வராஜ், ரங்கராஜ்குமார், ஆறுமுகம் உள் ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஏராள மானோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.