tamilnadu

img

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்திடுக

தருமபுரி, ஜூலை 14- புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலி யுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு பேரவையில் தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் 14 ஆம் ஆண்டு தருமபுரி மாவட்ட பேரவை கூட்டம் சிஐடியு மாவட் டக்குழு அலுவலகத்தில் ஞாயி றன்று மாவட்ட துணைத் தலைவர் டி.சிவம் தலைமையில் நடைபெற் றது. மாவட்ட துணைத் தலைவர் எம்.துரைசாமி வரவேற்றார். மண்டல செயலாளர் என்.பிச்சு மணி பேரவையை துவக்கி வைத்து பேசினார். மாநில துணைத் தலை வர் எச்.கிருஷ்ணன், அரசு போக்கு வரத்து ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் கே.குப்புசாமி, அனைத்து அரசுத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் கே.செளந்தரம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாவட்ட செயலாளர் ஜி.பி.விஜி யன், பொருளாளர் எம்.சின்ன சாமி ஆகியோர் அறிக்கையை முன்வைத்து பேசினர். இப்பேரவையில், மின்வாரிய வைரவிழா பரிசு 2015ஆம் ஆண்டு  நவம்பர் 30 ஆம் தேதிக்கு பின்  ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்க வேண்டும். 2003 ஆம் ஆண்டு ஏப்ரல்1 ஆம் தேதிக்கு பின் பணி யில் சேர்ந்து ஓய்வு பெற்றவர்களி டம் சிபிஎஸ் மூலம் பிடித்தம் செய் யப்பட்ட தொகையை உடனே வழங்க வேண்டும். மருத்துவ காப் பீடு திட்டத்தில் உள்ள குளறு படிகளை களைய வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

புதிய நிர்வாகிகள் தேர்வு

இப்பேரவையில் புதிய மாவட்ட தலைவராக ஆர்.சுந்தரமூர்த்தி, மாவட்ட செயலாளராக ஜி.பி.விஜி யன், பொருளாளராக எம்.சின்ன சாமி உள்ளிட்ட 17 பேர் கொண்ட  மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட் டது. முடிவில் மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநில  தலைவர் என்.சின்னசாமி நிறைவு ரையாற்றினார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் பி.நெடுங்கிள்ளி நன்றி கூறினார்.