tamilnadu

img

எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் உயர்மின் கோபுர விளக்கை சீரமைத்திடுக

நாமக்கல், ஜூன் 4-திருச்செங்கோடு வட்டம், அகரம் கிராமம் எலச்சிபாளையம் பேருந்துநிறுத்தத்தில் உயர்மின்கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்பாட்டிற்கு கொன்டுவரவேண்டும் என்று  பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளையம் பேருந்துநிறுத்தம் மாரியம்மன் கோவில் அருகில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மற்றும் மளிகைகடைஜவுளிக் கடை, டீக்கடைக்எனமிக நெருக்கமாகஉள்ளன. இப்பகுதியில்பொதுமக்கள் தொடர்ந்து பல ஆண்டு காலமாக உயர்மின் கோபுர விளக்குகள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர்.இந்நிலையில் கடந்த 4 மாதத்திற்கு முன்னாள் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு ஆளும் கட்சியினர் செல்வாக்கு பெறவேண்டும் என்ற நோக்கத்தோடு அவசரகதியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் தொகுதி  நிதியிலிருந்து 16 மீட்டர் உயரத்தில் எல்இடி விளக்குமின்கம்பம் ரூ.9  லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது.ஆனால், 4 மாதங்களுக்கு மேலாக ஆகியும் உயர்மின் கோபுர விளக்குகள் இப்பகுதி மக்களுக்கு பயன்படாமல் உள்ளது. பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள மின்விளக்குகள் அடிக்கடி பழுது அடைந்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் இப்பகுதியிலிருந்து பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்குப் பேருந்திலிருந்து இறங்கி செல்லும் பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு தங்களது பகுதிகளுக்கு கடந்து செல்கின்றனர். ஆகவேஉடனடியாக உயர்மின் கோபுர விளக்குகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.