tamilnadu

கோவையில் யானை தாக்கி ஒருவர் பலி

கோவை, மார்ச் 5-  கோவை நரசிபுரம் அருகே காட்டு யானை தாக்கியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அடுத்த வெள்ளருக்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிட்டுசாமி. கூலித் தொழிலாளியான இவர் புதனன்று பணி முடிந்து வீடு  திரும்பியுள்ளார். அப்போது, நரசிபுரம் அருகே காட்டுப் பாதை வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தபோது ஒற்றை யானை கிட்டுசாமியை தாக்கியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். மேலும், அவர் வந்த இருசக்கர வாகனத்தையும், காட்டு யானை தாக்கி சேதப்படுத்தியது. வியாழனன்று அதிகாலை அவ்வழியாக சென்றவர்கள் கிட்டுசாமி உயிரிழந்து கிடப்பதை பார்த்து போளுவாம்பட்டி வனத்துறையினருக்கும், ஆலாந்துறை போலீசாருக்கும் தகவல் அளித்தனர்.  இதன்பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கிட்டுசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்தில் விசாரணை மேற் கொண்ட வனத்துறையினர் யானை தாக்கி கிட்டுசாமி  உயிரிழந்ததை உறுதி செய்தனர். மேலும் அரசு வழங்கும் நிவாரண தொகையான 4 லட்சம் ரூபாயில் இருந்து அவ ரின் இறுதி சடங்கிற்கு 50 ஆயிரம் ரூபாயை அவரது உறவி னர்களிடம் வழங்கினர்.  இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், கோடை காலம் துவங்கியதால் மலைப் பகுதியிலிருந்து காட்டு யானைகள் கிராமங்களை நோக்கி வருவதாகவும், இரவு  நேரங்களில் வெளியே நடமாட வேண்டாம் என பொது மக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளதாக தெரிவித்தனர்.

;