tamilnadu

img

மின்கம்பிகள் மீது மரக்கிளைகள் உரசுவதால் மின் விநியோகம் தடை

நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

உதகை, அக்.31- உதகை நகராட்சிக்குட்பட்ட ஹிக் கின்ஸ் ரோடு, எல்க்ஹில் வியூ காட்டேஜ் அருகில் மரக்கிளைகளில் மின்சாரக் கம்பியில் உரசுவதால் அடிக்கடி மின் விநியோகம் துண்டிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.  இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த மூன்று மாதத்திற்கு  முன்பு பெய்த கனமழையின் காரணமாக இப்பகுதியில் மரக்கிளைகள் முறிந்து மின்சார கம்பியின் மீதும்,  வீட்டின் மீதும் விழுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. மேலும் மின் கசிவும் ஏற்பட்டது. நல்லவேளையாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இது குறித்து மின்சார வாரியத்திற்கு புகார் தெரிவித்ததை அடுத்து மின்வாரிய ஊழி யர்கள் வந்து அறுந்த மின்கம்பிகளை சீர் செய்தனர். 

ஆனால் மின் கம்பிகளின் மீதே மரத்தின் கிளைகள் உரசியபடி இருப்ப தால் அடிக்கடி மின் விநியோகம் பாதிக் கப்படுகிறது. மேலும் தெரு விளக்கும் எரிவதில்லை. இதனால் மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் பாதிப்படைந்து வருகின்றனர். தற்போது பெய்து வரும்  கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் வீடுகளின் மீது மரங்கள்  விழுந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இங்குள்ள மரங்கள் எப்போது வேண்டு மானாலும் வீட்டின் மீது விழும் அபாயம் உள்ளதால் அச்சத்துடன் வாழ்கிறோம்.  ஒவ்வொரு மாதமும் மின்வாரி யத்தின் சார்பில் மின் கம்பிகள் மீது உரசும் மரங்களை வெட்டி அப்புறப்ப டுத்துவார்கள். ஆனால் சில மாதங்க ளாக அப்பணி நடைபெறவில்லை. இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மின்வாரிய அதிகாரிகளிடம் தெரிவித் தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதி காரிகள் உடனடியாக தலையிட்டு அபாயகரமாக இருக்கும் மரக்கிளை களை அகற்றிட வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.