குடவாசல், பிப்.21- திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் குளிக்கரை அருகே சார்வன் கிராமத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் ஏ.தையான் உடல் நலம் இன்றி இருந்த இவர் வெள்ளிக்கிழமை காலை இயற்கை எய்தினார். அவரின் மறைவை அறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மறைந்த மூத்த தோழர் ஏ.தையான் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தி னார். கொரடாச்சேரி ஒன்றியச் செயலாளர் கே.சீனிவாசன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.கந்தசாமி, ஒன்றியக் குழு உறுப்பினர் கே.ஜோதிபாசு, கிளைச் செயலாளர்கள் கே.தங்கையன், எம்.தங்கராசு ஆகியோர் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.