tamilnadu

img

மின் ஊழியர் மாயம்: மீட்டுதரக் தரக்கோரி மனைவி மனு

பொள்ளாச்சி, செப். 5 - பொள்ளாச்சி அருகே மாயமான மின்சார வாரிய ஊழியரை மீட்டுத்தரக்கோரி அவ ரது மனைவி வருவாய் கோட்டாட்சியரிடம் புகார் மனு அளித்துள் ளார்.  கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த கோலார்பட்டி மாரியம் மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ரவிராஜ்,  இவரது மனைவி சரஸ்வதி  இவர்களுக்கு  இரண்டு பெண் குழந்தைகள் உள்ள னர். இதில் ரவிராஜ்  கோமங்கலம் புதூர் மின்சார வாரிய அலுவலகத்தில் கடந்த 7 ஆண்டுகளாக ஒயர்  மேனாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில்  அவரது  மனைவி சரஸ்வதி சார்- ஆட்சியர் அலு வலகத்தில்  வருவாய் கோட்டாட்சியர் ரவிக்குமாரி டம் மனு ஒன்றினை அளித்தார். அம்மனுவில் கூறியிருப்பதாவது,  பொள்ளாச்சி அருகே உள்ள கோமங்கலம் புதூர் மின்வாரிய அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த எனது கணவர் ரவிராஜ் கடந்த  ஆக. 31 ஆம் தேதி  மதியம் வீட்டிற்கு வந்தார்.  அப்போது அவர் மிகவும் சோர்வாக  இருப்பதைக் கண்டு அவரிடம் கேட்ட போது, உதவி மின் பொறியாளர் சரவணன்  என்னை செல்போனில் தொடர்பு கொண்டு தகாத வார்த்தை களில் திட்டியதாகவும், இதனால்  உங்களிடம் வேலை செய்வதற்கு தற்கொலை செய்து கொள்ள லாம் என்று கூறிவிட்டு வீட்டிற்கு வந்ததாக அவர் தெரிவித்தார். இதையடுத்து அவரை சமாதானம் செய்தேன்.  இந்நிலையில், சிறிது நேரத்திற்கு பின்னர் தனது இருசக்கர வாகனத்தில் விட்டிலிருந்து சென்றவர் தற் போது வரை வீடு திரும்பவிலை. இவர் குறித்து  உறவினர்களிடமும்,  அவருக்கு தெரிந்த நண்பர்க ளிடமும் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்க வில்லை. எனவே உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக காணாமல் போன எனது கணவரை மீட்டு தருவதுடன், சம்பத்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளர். இதையடுத்து கோட்டாட்சியர்  ரவிக்குமார், இந்த  மனு குறித்து விசாரிக்குமாறு பொள்ளாச்சி காவல் துணை கண்காணிப்பாளருக்கு பரிந்துரைத்துள்ளார்.