tamilnadu

தருமபுரி ,சென்னை ,புதுதில்லி ,ஈரோடு முக்கிய செய்திகள்

காரிமங்கலம்: பணிநேரத்தில் இல்லாத 12  ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்

தருமபுரி, ஜூலை 27- காரிமங்கலம் அரசு ஆண்கள் பள்ளியில் பணி நேரத்தில் வெளியே சென்ற 12 ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி  அலுவலர் குற்றபறிப் பாணை வழங்கியுள்ளார். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு ஆண் கள் மேல்நிலைப் பள்ளி யில் சுமார் 50க்கும் மேற் பட்ட ஆசிரியர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந் நிலையில் முதன்மை கல்வி அலுவலர் சி.இராமசாமி பள்ளியில் தீடீர் ஆய்வு மேற்கொண்டார். அப் போது, பணி நேரத்தில் பல ஆசிரியர்கள் பணியில் இல்லாததை கண்டு அதிர்ச் சியடைந்தார். இதையடுத்து வருகைப் பதிவேட்டை  சரிபார்த்தபோது பல ஆசி ரியர்கள் கையெழுத்திட்டு விட்டு தங்களது சொந்த வேலைக்காக வெளியே சென்று இருப்பது தெரிய வந்தது.  இதையடுத்து பணி நேரத்தில் பள்ளியில் இல் லாத ஆசிரியர்கள் உள் ளிட்ட 12 பேருக்கு விளக்கம் கேட்டு 17 (பி) ,குற்ற குறிப் பாணை வழங்க உத்தரவிட் டுள்ளார்.

தமிழின் தோற்றம் குறித்து தவறாக எழுதிய புத்தக தயாரிப்புக் குழுவினர் மீது நடவடிக்கை

சென்னை,ஜூலை 27- 12 ஆம் வகுப்பு ஆங்கில பாடப் புத்தகத்தில் தமிழ் மொழியின் தோற்றம் குறித்து தவறாக எழுதிய புத்தக தயாரிப்புக் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. பிளஸ்-2 ஆங்கில பாடப்புத்தகத்தில் 142 ஆம் பக்கத்தில் மொழிகள் பற்றிய ஒரு பாடப்பிரிவு இடம்பெற்று  இருந்தது. அதில் தமிழ் மொழி  கி.மு.300 ஆண்டுகள் தொன்மையானது என்றும், அதைவிட சமஸ்கிருதம் மொழி கி.மு.2000 ஆண்டுகள் தொன்மையானது என்றும் சர்ச்சைக்குரிய கருத்து பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த பதிவுக்கு தமிழ் ஆர்வலர்கள், கல்வி யாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.  சமஸ்கிருதத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தவறான பாடப்பகுதி நீக்கப்படும். இந்த தவறுக்கு காரண மானவர்கள் மீது கண்டிப்பாக நட வடிக்கை எடுக்கப்படும். மேலும் சம்பந்தப்பட்ட பாடப்பகுதியில் உரிய திருத்தங்கள் செய்ய அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தர விடப்பட்டுள்ளது என்று  தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.  இந்த நிலையில் 12 ஆம் வகுப்பு ஆங்கில பாடப் புத்தகம் தயாரிப்புக் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் புத்தகத்தில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதியும் நீக்கப்படும்  என்றும்  பள்ளி கல்வித்துறை தெரி வித்துள்ளது. உலக மொழிக்கெல்லாம் மூத்த மொழியான தமிழின் தொன்மையை விளக்கி மீண்டும் ஒரு சுற்றறிக்கை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.

தனியார் பள்ளிகளிலிருந்து ஒரு லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளுக்கு வந்தனர்

சென்னை, ஜூலை 27- தமிழகத்தில் இந்த ஆண்டில் தனியார் பள்ளிகளிலிருந்து சுமார் ஒரு லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளி களுக்கு வந்துள்ளனர்.  அரசுப் பள்ளிகளில் போதிய வசதிகள் இல்லை என்றும் கல்வித் தரம் இல்லை என்றும் கூறி பெரும்பாலான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளைத் தனியார் பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர். அரசு அதிகாரிகள் கூட தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கத் தயங்குகின்றனர். இந்நிலையில் 2019-20 ஆம் ஆண்டில் மட்டும் 2 முதல் 5 வரையிலான வகுப்புகளுக்கு ஒரு லட்சம் மாண வர்கள் தனியார் பள்ளிகளிலிருந்து அரசுப் பள்ளிகளுக்கு இடம் மாறியுள்ள னர். தனியார் பள்ளிகளில் வசூலிக்கப் படும் அளவுக்கு அதிகமான கட்டணங் களால்தான் இவ்வாறு மாணவர்கள் இடம் மாறுவதாகத் தலைமை ஆசிரியர்களும் கல்வித் துறை நிபுணர் களும் கூறுகின்றனர். 2018-19ஆம் ஆண்டில் மொத்தம் 3.93 லட்சம் பேர் ஒன்றாம் வகுப்பு  படித்த நிலையில் இந்த ஆண்டில்  இரண்டாம் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை 4.16 லட்சமாக உயர்ந்துள் ளது. தனியார் பள்ளிக ளிலிருந்து 23,032 பேர் இரண்டாம் வகுப்பில் இணைந்துள்ளனர். மூன்றாம்  வகுப்பில் 30,744 மாணவர்களும், நான் காம் வகுப்பில் 27,868 மாணவர்களும், ஐந்தாம் வகுப்பில் 23,859 மாணவர்க ளும் புதிதாக இணைந்துள்ளனர். இரண்டு முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டில் ஒரு லட்சம் வரையில் உயர்ந்துள்ளதாகக் கல்வித் துறை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் 44 தனிநபர் மசோதாக்கள் தாக்கல்

புதுதில்லி, ஜூலை 27- நாடாளுமன்ற மக்கள வையில் வெள்ளியன்று 44 தனிநபர் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.  இதில் முன்னாள் கிரிக் கெட் வீரரும், கிழக்கு தில்லி  பா.ஜனதா எம்பி.யுமான கவுதம் கம்பீர், மருத்துவ பணியாளர்கள் பாதுகாப்பு மசோதாவை தாக்கல் செய் தார். தவறான சிகிச்சை அளித்ததாக கூறி நோயா ளிகளின் உறவினர் கள் மருத்துவர்களை தாக்கு வதை தடுக்க வேண்டும் என அவர் வலி யுறுத்தினார். இதைப்போல நாட்டில் இருந்து மரண தண்ட னையை ஒழிக்க வகை செய்யும் மசோதாவை தி.மு.க. எம்.பி. கனிமொழி தாக்கல் செய்தார். மேலும் கருணைக் கொலையை ஒழுங்குபடுத்த வகை செய் யும் மசோதா ஒன்றை பிஜூ ஜனதாதள உறுப்பினர் பர்த்ருகரி மக்தாப் தாக்கல் செய்தார். ஜனார்த்தன் சிங் சிக்ரி வால் தாக்கல் செய்த கட் டாய ஓட்டளிப்பு மசோதா வுக்கு உறுப்பினர்கள் பரவ லாக ஆதரவும், எதிர்ப்பும்  தெரிவித்தனர்.  இதைத்தவிர ஒருமுறை உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய் வது, போலி செய்திகளை  தடுப்பது போன்ற மசோ தாக்களும் எம்.பி.க்கள் சார்பில் தாக்கல் செய்யப் பட்டன.

மக்களை அச்சுறுத்தும் டிப்தீரியா

ஈரோடு,ஜூலை 27-  மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கேரள மக்களை அச்சுறுத்திய  டிப்தீரியா நோய் தற்போது தமிழகத்தில் பரவி வருகிறது. ஈரோடு மாவட்டம், கடம்பூர் மலைப்பிரதேசத்தில் ஓரத்தி, மல்லியம்மன்துர்கம் உள்ளிட்ட சில ஊர்களில் இந்த நோயால் இதுவரை இரண்டு சிறுவர்கள் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.