மேட்டுப்பாளையம், ஆக.12- கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தில் உள்ள பில்லூர் அணையில் வரலாறு காணாத நீர்வரத்தின் வேகம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த நீர் மின் உற் பத்தி பணிகள் தற்போது மீண்டும் துவங்கியுள்ளன. மேற்குதொடர்ச்சி மலைக் காடுகளை நீர்பிடிப்பு பகுதிகளாக கொண்டு மேட்டுப்பாளையத்தில் உள்ள மலை முகட்டின் நடுவே 1967 ஆம் ஆண்டு பில்லூர் அணை கட்டப்பட்டது. நூறு அடி நீர்மட்ட உயரம் கொண்ட பில்லூர் அணை யின் நீர் கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடி நீர் மற்றும் பாசன ஆதாரமாக உள்ளது. பில்லூர் அணையில் இருந்து தினசரி நூறு மெகாவாட் நீர்மின் உற்பத்தியும் செய்யப்படு கிறது. இந்நிலையில், கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக அணை யின் நீர்பிடிப்பு பகுதிகளான மேற்குதொடர்ச்சி மலைப்பகுதி யில் பெய்யும் கனமழை காரண மாக கடந்த ஆக.5 ஆம் தேதி பில் லூர் அணை அதன் முழு கொள்ள ளவை எட்டி நிரம்பியது. இதனை யடுத்து அன்று பிற்பகல் முதல் அணையின் பாதுகாப்பு கருதி அதன் நீர்வரத்து அப்படியே உபரி நீராக பவானியாற்றில் திறந்து விடப்பட்டு வந்தது. இத னால் பவானியாறு கரை புரண்டு ஓடதுவங்கி கடும் வெள் ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனையடுத்து கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் அணையில் இருந்து வெளியே றும் உபரி நீரின் அளவு வினா டிக்கு 10 ஆயிரம் என துவங்கி, அதுவே வினாடிக்கு 20 ஆயிரம், 40 ஆயிரம், 60 ஆயிரம் என நாள் தோறும் அதிகரித்தபடி இருந்தது. பின்னர் கடந்த ஆக.8 ஆம் தேதி பில்லூர் அணை கட்டப்பட்டதில் இருந்து இதுவரை இல்லாத வகை யில் அணைக்கான நீர்வரத்தும் வெளியேற்றமும் வினாடிக்கு 80 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. பின்னர் இதுவே இரவு வரலாறு காணாத வகையில் வினாடிக்கு 88 ஆயிரம் கன அடியாக உயர்ந்து பவானி கரையோர பகுதிகளான மேட்டுப்பாளையம் மற்றும் சிறு முகை பகுதிகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும், மலைக்காட்டில் இருந்து அணைக்கு வரும் நீரின் வேகம் மிக அதிகமாக இருந்த காரணத்தினாலும், அடர்ந்த காடு கள் வழியே வரும் மழை நீரில் சகதிகள் மற்றும் வெள்ளத்தின் வேகத்தில் அடித்து வரும் மரக் கட்டைகள் அதிகம் இருந்த கார ணத்தினாலும் நீர் மின் உற்பத்தி பணியில் சிக்கல் ஏற்பட்டது. இத னால் நீர்மின் நிலையத்தில் உள்ள மோட்டார்கள் பழுதடையும் சூழல் ஏற்பட்டு கடந்த ஆக.9 ஆம் தேதி தலா ஐம்பது மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரு இயந்திரங்களும் நிறுத்தப்பட் டன. இதனால் அணையின் நூறு மெகாவாட் நீர்மின் உற்பத்தி பணி கள் முற்றிலுமாக முடங்கியது. இந்நிலையில் ஞாயிறன்று முதல் அணைக்கான நீர்வரத்து படிப்படியாக குறைந்து திங்க ளன்று காலை அணையின் நீர் வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியானது. இதனைய டுத்து நீர்மின் நிலையப்பகுதி யில் அடைத்திருந்த சகதிகள் அகற்றும் பணி நடைபெற்றது.
அணை ஊழியர்களின் நான்கு மணி நேர சீரமைப்பு பணிக்கு பின் மதியம் முதல் வழக்கமான முறையில் நீர்மின் உற்பத்தி பணி கள் துவங்கின. அணைக்கு வந்த அதிகளவு நீர் மற்றும் அதில் கலந்து வந்த சகதி காரணமா கவே நீர்மின் நிலையத்தின் பாதுகாப்பு கருதி மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதாகவும், தற்போது மூன்று தினங்களுக்கு பின்னர் மீண்டும் மின் உற்பத்தி துவங் கியுள்ளதாகவும் மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்க பட்டுள்ளது. தற்போது பில்லூர் அணையில் இருந்து உபரி நீர் மற்றும் மின் உற்பத்தி பணிக்காக வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் பவானியாற்றில் வெளியேற்றப் பட்டு வருகிறது. இதனால் எட் டாம் நாளாக பவானியாற்று கரையோரப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்கிறது.