tamilnadu

img

பிபிசி பங்குகளை தனியாருக்கு விற்காதே பாரத் பெட்ரோலிய டாங்கர் லாரி ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை, நவ.12– பாரத் பெட்ரோலிய நிறுவ னத்தின் பங்குகளை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் நடவடிக் கையை கண்டித்து கோவையில் செவ்வாயன்று டேங்கர் லாரி ஓட்டு நர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர்.  மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோ லிய நிறுவனத்தை தனியார் மயப்படுத்தும் நடவடிக்கையில் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு தீவிரமாக மேற் கொண்டு வருகிறது. இதனால் அரசின் வேலைவாய்ப்பு சுருங் குவதோடு, எரிபொருட்களின் விலையை தனியார் நிறுவனங்கள் தங்களது இஷ்டத்திற்கு நிர்ண யம் செய்ய வழிவகுக்கும். இத னால் ஒட்டுமொத்த பொருளா தாரமும் மிகப்பெரிய பாதிப்பிற் குள்ளாகும். ஆகவே, மத்திய அரசு இத்தகைய முடிவை கைவிட வேண்டும்.  மேலும், டேங்கர் லாரி ஓட்டு நர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும். ஓட்டுநர்களுக்கு மலிவு விலையில் உணவு வழங்க, பிபிசி வளாகத்தில் உணவு விடுதி அமைத்திட வேண்டும். அடிப் படை வசதிகளை மேம்படுத்து வடன், ஓட்டுநர்களின் வேலை  நேரத்தை நிர்ணயம் செய்ய வேண் டும். அனைத்து ஓட்டுநர்களுக்கும் பிஎப், இஎஸ்ஐ உள்ளிட்ட சட்ட சலுகைகளை அமல்படுத்த வேண் டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாயன்று கோவையில் டேங்கர் லாரி ஓட்டுநர்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.  கோவை இருகூர் பாரத் பெட் ரோலிய ஆலைவாயில் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் டெம்போ ரபீக்  தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சாலை போக்கு வரத்து தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் ஏ.எம்.ரபீக், பிபிசி டேங்கர் லாரி ஓட்டுநர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் ராஜ சேகர், செல்வராஜ், கார்த்தி மற் றும் அப்துல்கலாம் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்கள் குறித்து உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற் றுக்கும் மேற்பட்ட பிபிசி டேங்கர் லாரி ஓட்டுநர்கள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை வலி யுறுத்தி முழக்கங்களை எழுப் பினர்.