பொள்ளாச்சி, பிப்.26- பொள்ளாச்சியில் திராவிடச் சிறகுகள் சார்பில் 21- வது கருத்தரங்கம் நிகழ்ச்சி சூர்யா அரங்கத்தில் திங்களன்று நடைபெற்றது.இக்கருத்தரங்கிற்கு திமுக இளைஞரணி மாவட்டத் துணை அமைப்பா ளர் இரா.நவநீதகிருஷ்ணன் தலைமை வகித்தார். திராவிடச் சிறகுகள் ஒருங்கிணைப்பாளர் பா.கார்த்தி கேயன் வரவேற்று பேசினார். இதனைத்தொடர்ந்து திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன் மற்றும் சூலூர் பாவேந்தர் பேரவை ஒருங்கிணைப்பாளர் புலவர் செந்தலை ந.கவுதமன், மேனாள் தலைமை ஆசிரியர் அனவயல் ச.கணேசன், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.கண்ணப்பன், ஆதிதிராவிடர் நலக்குழு மாநிலக்குழு உறுப்பினர் திப்பம்பட்டி ஆறுச்சாமி, ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். இதில் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.