tamilnadu

வரதட்சணை கொடுமை கோவையில் 6 பேர் மீது வழக்கு பதிவு

கோவை, நவ. 24- வரதட்சணை கொடுமையில் ஈடுபட்ட கணவன் உள்ளிட்ட 6 பேர் மீது கோவையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை கவுண்டம்பாளையம், எஸ்.கே.ஆர்.தெரு பகுதியில் வசிப்பவர் சுப்பிர மணி. அவருடைய மகள் பிரியங்கா (25). இவ ருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ண  பிரகாஷ் (28) என்பவருக்கும் கடந்த மூன்று  வருடங்களுக்கு முன்பு திருமணம் நடை பெற்றது. அப்பொழுது மணப்பெண்ணுக்கு 100 பவுன் நகை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். இந்த நிலையில் கணவருடைய குடும்பத்தார் 100 பவுன் நகையை பெற்றுக்கொண்டு, மேலும் பெற் றோரிடம் நகை, பணம் பெற்றுத் தருமாறு பிரியங்காவை அடித்து துன்புறுத்தினர்.  இதனையடுத்து பிரியங்கா துடியலூரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத் தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையி னர் கணவர் கிருஷ்ண பிரகாஷ், மாமனார் செல்லமுத்து, மாமியார் செல்வி, நாத்தனார் கள் காளியாத்தா, லாவண்யா, கொழுந்த னார் திருக்குமரன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடி வருகின்றனர்.

;