tamilnadu

img

பாரம்பரியமான அரசுப் பள்ளிகளை மூடாதே

அவிநாசி, ஆக. 13- அவிநாசி அடுத்து நாதம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை மூட முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர் கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவிநாசி ஒன்றியம், செமியா நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட நாதம்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள் ளது. இப்பள்ளி 1952 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றது. இந்த நிலையில் செவ்வாயன்று அவிநாசி கல்வி அதிகாரி கள் பள்ளியை மூட முயற்சி செய்தனர். அப்பகுதியைச் சேர்ந்த முன்னாள் மாண வர்கள் மற்றும் பெற்றோர்கள் பாரம்பரிய மான அரசு தொடக்கப்பள்ளியை மூடக் கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டுள் ளனர்

. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த முன்னாள் மாணவர் பழனிசாமி கூறுகை யில், இப்பள்ளி 1952 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. 2017ஆம் ஆண்டு வரை ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை நூற்றுக்கும் மேற்பட்ட மாண வர்கள் படித்து வந்தனர். 2019 ஆம் ஆண்டு சிட்டிபாபு என்பவரின் மகன் ரோஹித் இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். ஒரு மாணவர் மட்டும் படித்து வருகிறார் என்ற காரணமாக பள்ளியினை மூட முயற்சி செய்கின்றார்கள். இங்கு பணியாற்றி வந்த ஆசிரியரையும் கூட கருவலூர் பள்ளிக்கு மாற்றம் செய்து விட்ட தாக கூறுகின்றனர். தமிழக அரசாங்கம் டாஸ்மாக் கடை ஊராட்சிக்கு ஒன்று என்ற விகிதத்தில் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் பள்ளிக்கூடங்களை மூடி வருகின்றனர். வருகின்ற 10 நாட்களுக்குள் மாணவர்கள் சேர்க்கை விகிதம் அதிகப்படுத்த உள் ளோம். அது மட்டுமின்றி தேர்தல் காலங்க ளில் இப்பள்ளி வாக்குச்சாவடி ஆக உள் ளது. ஆகவே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை மூடக் கூடாது என்றார். இதே போல் அப்பள்ளியின் முன்னாள் மாணவர் கள், பெற்றோர்கள்  மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.