கோவை, செப். 3 – மழையின் காரணமாக சேறும், சகதியுமாக உள்ள இடத்தை சுத்தம் செய்ய மறுக்கும் அதிகாரிகளைக் கண் டித்து கோவையில் காய்கறி வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கொரோனா தொற்று அபாயம் காரணமாக கோவை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வந்த காய்கறி சந்தைகள் பள்ளி மைதானம் உள்ளிட்ட பல் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டது.
இதில் ஒரு பகுதி யாக, கோவை மேட்டுப்பாளையம், சாலையில் சாய்பாபா கோவில் பகுதியில் செயல்பட்டு வந்த அண்ணா மார்க் கெட்டில் பாதி கடைகள், தடாகம் சாலையில் உள்ள அரசி னர் பொறியியல் கல்லூரி வளாகத்திற்கு மாற்றப்பட்டது. இவ்வாறு 400க்கும் மேற்பட்ட கடைகள் மாற்றபட்டு, திறந்த வெளியில் காய்கறிச் சந்தை செயல்பட்டு வந்தது.
இந்நிலையில், கோவையில் கடந்த சில தினங்களாகவே பலத்த மழை பெய்து வருவதால் திறந்த வெளியில் செயல் பட்டு வந்த சந்தை சேறும், சகதியுமாக மாறியது. சில இடங் களில் அப்பகுதியில் மழைநீர் தேங்கி வியாபாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனை சரி செய்யக்கோரி அரசு அதிகாரிகளிடம் வியாபாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர். அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக் காததால் திடீரென காய்கறி வியாபாரிகள் அரசினர் பொறி யியல் கல்லூரி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, காய்கறி சந்தைகளுக்கான அடிப்படை வசதி களைக் கூட அரசு செய்து தரவில்லை எனவும், மேலும் சேறும், சகதியில் நின்று வியாபாரம் செய்து வருகிறோம் எனவும் ஆவேசமாக தெரிவித்தனர்.
இதை யடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சாய்பாபா காலனி காவல்துறையினர் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக இடத்தை சுத்தம் செய்துதர நட வடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்ற னர்.