அவிநாசி, ஆக. 13- சில்லறை வணிகத்தில் அந்நிய நிறுவனங்களை அனு மதிக்கக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் அவிநாசி பகுதியில் செவ்வாயன்று பிரச்சார இயக்கம் நடைபெற்றது. சில்லறை வணிகத்தில் அந்நிய நிறுவனங்களை அனுமதிக்கக் கூடாது. பொதுத் துறையை தனியாருக்குத் தாரைவார்க்கக் கூடாது. சுயதொழிலை காக்க சுதேசி கொள்கையை கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி அவிநாசி புதிய பஸ் நிலையம் அருகில் பிரச்சாரம் நடைபெற்றது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, திருப்பூர் மாவட்ட பாண்டியன் நகர் வணிகர் சங்கம் மற்றும் திருப்பூர் மாவட்ட அனைத்துவித வியா பாரிகள் சங்கம் இணைந்து பத்துக்கும் மேற்பட்ட இடங்க ளில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இப்பிரச்சார பயணத் தில் பாண்டியன் நகர் வணிகர் சங்கம் மற்றும் அவிநாசியை உள்ளடக்கிய சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்ட னர்.